India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கீழ கல்லூரை சேர்ந்த பழனி(21) என்பவர் மேலப்பாளையம் தெற்கு புறவழிச்சாலை பகுதியில் நேற்று காலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வீரமாணிக்கபுரம் சுடலைமுத்து (19) மற்றும் ஒரு சிறார் அவரை பணம் கேட்டு மிரட்டி தொடர்ந்து அச்சுறுத்தி அவரிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்து சென்றனர். மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

சென்னை கிண்டி மெட்ரோ ரயில் அருகில் உள்ள பழக்கடையில், தோழியுடன் ஜூஸ் குடித்த பெண்களிடம் இருவர் பட்டப்பகலில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான தளபதி (34) என்பவரை பிடித்து தர்ம அடி கொடுத்து அக்கம் பக்கத்தினர் கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் தப்பி ஓடிய உதயகுமார்(39), என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணத்தை பிரியாணி மாஸ்டர் ஜாகீர் (55). இவர் கடந்த 7-ந் காலை அரக்கோணம் வின்டர்பேட்டை டி.பி.ரோடு பகுதியில் பைக்கில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜாகிர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று (பிப்.11) சிகிச்சை பலனின்றி ஜாகீர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வங்கதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் தங்கி வேலை பார்ப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்துக்கு சென்று உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த ரபிகுல் இஸ்லாம் என்பவரை கைது செய்தனர்.

காட்பாடி காவல் நிலையம் அருகே காவலர் குடியிருப்பு பகுதி பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. அதில் ஒரு குடியிருப்பில் நேற்று (பிப்.11) இரவு வட மாநில வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேந்தமங்கலம் அருகே துத்திக்குளம் 6-ம் வகுப்பு மாணவி லிதியா, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு GH யில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தம்பி ஏற்கனவே காய்ச்சலால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கிராமத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. விசாரணையில், மணப்பாறையைச் சேர்ந்த அஜித் (27) என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியைத் துஷ்பிரயோகம் செய்தது உறுதியானது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அஜித்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நரிக்குடி அருகே துய்யனூர் கிராமத்தை சேர்ந்த லிங்கேசுவரன்(19) ஐ.டி.ஐ. மாணவர். பெட்ரோல் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றபோது, நரிக்குடியை சேர்ந்த அதுனான் ஓட்டி வந்த பவர் டிராக்டர் சமத்துவபுரம் அருகே மோதியது. படுகாயமடைந்த லிங்கேசுவரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெற்றோர் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

ராமநத்தம் அடுத்த ம.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (65). இவரது பேத்தியை அதே பகுதியை சேர்ந்த தேவா என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க முயன்ற சாமிக்கண்ணை, தேவா தாக்கியதில் காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், காவனூர் பகுதியை சேர்ந்தவர் ராதா (34). இவர் நேற்று காவனூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் பொத்தேரி நோக்கி சென்று கொண்டிருந் தார். பொத்தேரி ரெயில் நிலையம் அருகே சிக்னலில் சாலை கடப்பதற்காக காத்திருந்த அவர் மீது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பட்டை இழந்து அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தியிலே துடிதுடித்து உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.