India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதவை சேதராப்பட்டு – குரும்பாபேட் மின் பாதையில் இன்று (பிப்.12) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே சேதராப்பட்டு தொழிற்பேட்டை, சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப்பட்டு புதிய காலனி, சேதராப்பட்டு கிராமம், முத்தமிழ் நகர் ஒரு பகுதி, EVR தெரு மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் இன்று (பிப்.12) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையோர் தேவையான சான்றுகளுடன் வருகிற பிப்ரவரி 16ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் விண்ணப்பிக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் பிப்ரவரி 14 (சனிக்கிழமை) அன்று ஏ.கே.சமுத்திரம் ஞானமணி கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. இதில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 5,000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன. வேலை தேடுவோருக்கு இதை அதிகம் SHARE பண்ணுங்க!

குளச்சல் பகுதியைச் சேர்ந்த கபீர் (66) என்பவர், தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2-ம் தேதி, பணியில் இருந்தபோது குப்பைகளைச் சேகரிக்க வந்த நகராட்சி குப்பை வண்டி அவர் மீது மோதி படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முந்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி நசீமாஅளித்த புகாரின் பேரில் போலீசார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டம் நாளை (பிப்.13.2026) சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி மாநகர காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கருப்பூர் முதல் சீலநாயக்கன்பட்டி வரை சுமார் 17 கி.மீ தூரத்திற்கு 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் சேவூரை அடுத்த பந்தம்பாளையம் கணபதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி, இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள். இவர்களது மகன் கபிலன் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாக நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை விமான நிலையத்தில், மதுரைக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கஞ்சா கடத்தல் முயற்சி கண்டுபிடிக்கப்பட்டது. வான் நுண்ணறிவு சுங்கத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், பாங்காக்கிலிருந்து வந்த பயணியின் உடைமைகள் சோதனையிடப்பட்டன. சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9.50 கோடி. சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் உயர்கல்வி உதவித்தொகை பெறும் மாணவ-மாணவிகளுக்கு இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு படிக்கும், உதவித்தொகை பெறும் அல்லது விண்ணப்பித்துள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

போடி அருகே தருமத்துப்பட்டி பகுதியை சேர்ந்த திவ்யபாரதி (25)யின் பெற்றோர், சில்லமரத்துப்பட்டியை சேர்ந்த மகாலட்சுமியிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கி பின்னர் திருப்பிச் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதன்பிறகும் மேலும் பணம் கேட்டு மகாலட்சுமி, அவரது மகள் வினோ, தர்மராஜ், சுருளியாண்டி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போடி தாலுகா போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தி.மலை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் 110 இடங்களில் விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையங்கள் படிப்படியாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகள் அல்லாத நபர்கள் வியாபாரிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தி.மலை கலெக்டர் கறாராக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.