India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பையர்நாயக்கன்பட்டியை சேர்ந்த சுதீப்பு (21) +1 படித்து வந்த மாணவியை (17) காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கோட்டப்பட்டி போலீசார் சுதீப் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காரப்பட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் ருத்ரன்(2) செங்கல் சூளையில் விளையாடி கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் விழுந்து மயங்கிய குழந்தையை, உடனே திருப்பத்தூர் தலைமை மருத்துவமனையில் நேற்று (பிப்-11) இரவு 10 மணியளவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதனால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் அரசு, தனியார், உதவி பெறும், மெட்ரிக் என மொத்தம் 66 உயர்நிலைபள்ளிகள், 156 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் பத்தாம் வகுப்பில் 144 பள்ளிகளில் 14,103 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே செய்முறைத்தேர்வுகள் நடக்க உள்ளன. செய்முறைத்தேர்வுகள் பிப்.23.ல் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையில் 28,740 கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) & உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤TN-ல் மட்டும் 2,000 காலியிடங்கள் உள்ளன ➤வயது: 18-40 ➤தகுதி: 10th Pass, சைக்கிள் ஓட்ட தெரிய வேண்டும் ➤தேர்வு கிடையாது ➤சம்பளம் BPM: ₹12,000- ₹29,380 வரை. ABPM: ₹10,000- ₹24,470 வரை ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.14. ➤விண்ணப்பிக்க இங்கே கிளிக் <

சின்னதடாகத்தைச் சேர்ந்தவர் பரத்ராஜ். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய நண்பர் ஆதித்யா, தோழி சங்கீதா ஆகியோர் காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கார் கட்டுப்பாட்டு இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் பரத்ராஜ் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். மேலும், 2 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செம்மஞ்சேரியை சேர்ந்த சதீஷ். மனைவி தேவி (27). தேவியின் நடத்தையில் சதீஷ் சந்தேகம் அடைந்ததால் தேவி அவரது சகோதரி வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம், பேருந்து நிறுத்தம் நோக்கி தேவி நடந்து சென்றார். அப்போது, எதிரே வந்த சதீஷ். மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓட ஓட தேவியை குத்தினார். புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீசார் சதீஷை நேற்று கைது செய்தனர்.

திண்டுக்கல்,வேடசந்தூர் அருகே உள்ள மல்லனம்பட்டி பகுதியில் காகங்கள் மற்றும் பறவைகள் திடீரென செத்து செத்து விழுவதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். மாவட்ட சுகாதாரத்துறை மாவட்ட கால்நடை துறை சம்பவ இடங்களில் நேரில் ஆய்வு செய்து வீடுகளில் வளர்க்கும் கோழி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளுக்கு நோய் தொற்று எதுவும் ஏற்பட்டுள்ளதாக என விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்ப ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. தாய் தந்தை இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சிறுமியை தன் பொறுப்பில் வளர்க்க தந்தை நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்நிலையில் சிறுமி கடந்த ஆண்டு அவரது தந்தை பாலியல் தொந்தரவு அளித்ததாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இது தொடர்பாக கிளாம்பாக்கம் மகளிர் போலீசார் விசாரித்து சிறுமியின் தந்தையை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.

எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முருகன்(69). இவரது மனைவி பெரியபாளையம் அரசுப் பள்ளி ஆசிரியையாக பணி புரிகிறார். இந்நிலையில், நேற்று(பிப்.11) தனது சைக்கிளில் பெரியபாளையம் அரசுப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, மேம்பால சாலை வளைவில் திரும்பும் போது, அந்தப் பக்கம் வந்த லாரி மோதியதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி உயிரிழந்தார்.

விக்கிரவாண்டி அடுத்த தென்னவராயன்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(42). பெயிண்டரான இவரது சகோதரி வேல்விழி, தம்பி வேலு ஆகியோர் உடல் நிலை சரியில்லாமல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்தனர். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த ராஜா, நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.