India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து வேலையில்லாத இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த முகாமில் வேலை நாடுவோர் கலந்து கொண்டு பயன்பெற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர்…!

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <

இராமநாதபுரம் மக்களே; எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். *எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம ஷேர் பண்ணுங்க.

பேரணாம்பட்டை சேர்ந்த மாணவி (18) நேற்று (பிப்.11) கல்லூரி முடிந்து தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த அப்துல் லத்தீப் (52) மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் செல்போனில் கூறினார். இதையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பேரணாம்பட்டு போலீசார் அப்துல் லத்தீபை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வந்தவாசியில் தவெக மாவட்ட செயலாளர் பிறந்தநாள் விழாவில் விதிகளை மீறிய 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தவெக மாவட்ட செயலாளர் உதயகுமார் பிறந்தநாள் விழாவில் சாலையில் பட்டாசு வெடித்து கிரேன் மூலம் மாலை அணிவித்து அட்டகாசத்தில் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கடந்த 2025ல் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 3082 பேர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 ஆண்களுக்கு வாசக்டமி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024 -2025 ல், 21 ஆண்கள், 4299 பெண்கள் என மொத்தம் 4320 பேர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன்கள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 55 வயது மதிக்கத்தக்கவருக்கு திசுசார் கோமா புற்றுநோயும், 47 வயது பெண்ணுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய், 65 வயது முதியவருக்கு மலக்குடல் புற்றுநோய் கண்டறியப்பட்டு புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் கணேஷ் பாபு, புற்றுநோயியல் கதிர்வீச்சு நிபுணர்கள் பிரியதர்ஷினி, முனிஸ்வரபாண்டியன், செபி கிருஷ்ணன் அடங்கிய மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

கொல்லமங்கலத்தைச் சேர்ந்த ராகவன் (30) சுவேதா (28) என்பவரை 2022-ல் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ராகவன் பசுமாத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி கே.வி.குப்பம் போலீசார் விசாரித்ததில் ராகவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு மற்றும் தொடர்ந்து பணம் கேட்டு சுவேதாவை கொடுமை படுத்தியதால் சுவேதாவின் தந்தை மருமகனை கொலை செய்தது தெரிய வந்தது.

அரக்கோணம் அடுத்த நாகவேடு அரசு பள்ளியில், கடந்த10-ம் தேதி ஆசிரியர் ஒருவர் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த +2 மாணவர்கள் கண்டித்துள்ளார். இதில் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட கோபமடைந்த ஆசிரியர் ஒரு மாணவனை அடித்துள்ளார். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அரக்கோணம் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை அருகே ஆலஅள்ளி கிராமத்தில் பெங்களூருவை சேர்ந்தவருடைய பண்ணையின் மின்வேலி அருகே வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று (பிப்.11) மதியம் தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் அப்பகுதி கோழிப்பண்ணையில் வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மன்மதநாயக் (26) என தெரிந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.