Tamilnadu

News February 12, 2026

நாகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் சென்னையில் வழங்கபட உள்ளன. இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து, 3 மாத பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

தோகைமலை அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது!

image

கரூர் பசுபதிபாளையம், தோகைமலை காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் செல்லாண்டிபாளையத்தில் மது விற்ற கந்தர்வகோட்டையை சேர்ந்த சந்தோஷ்குமார் (27), சின்ன ரெட்டியபட்டி பெட்டி கடையில் மது விற்ற அதே பகுதியை சேர்ந்த மலர் (41) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 39 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

News February 12, 2026

கடலூர்: பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

சேத்தியாத்தோப்பு அடுத்த பொன்னங்கோவிலை சேர்ந்தவர் செல்வமணி மகள் ஷிவாணி (16). பூதங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ஷிவானி, நேற்று மாலை பெற்றோர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 12, 2026

புதுக்கோட்டை: வேன் மோதி பரிதாப பலி!

image

விராலிமலை அருகே இராசநாயகம்பட்டியை சேர்ந்த இருதயம் 60, (பிப்.11) தண்ணீர் பந்தல் பட்டி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையை சேர்ந்த அப்துல் ரஹீம் 45, ஓட்டி வந்த டூரிஸ்ட் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது மருமகன் துரை செபஸ்டியான் கொடுத்து புகார் என் பேரில் விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 12, 2026

புதுக்கோட்டை: வேன் மோதி பரிதாப பலி!

image

விராலிமலை அருகே இராசநாயகம்பட்டியை சேர்ந்த இருதயம் 60, (பிப்.11) தண்ணீர் பந்தல் பட்டி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையை சேர்ந்த அப்துல் ரஹீம் 45, ஓட்டி வந்த டூரிஸ்ட் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது மருமகன் துரை செபஸ்டியான் கொடுத்து புகார் என் பேரில் விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 12, 2026

தஞ்சை – காரைக்கால் புதிய ரயில் பாதை திட்டம்

image

தஞ்சை – திருவாரூர் – காரைக்கால் புதிய ரயில் பாதை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாராகிவிட்டதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இன்று உறுதி செய்துள்ளார். டெல்டா மாவட்டங்களின் வணிகம், சரக்கு போக்குவரத்து மற்றும் ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்த இத்திட்டம் பெரிதும் உதவும். விரைவில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவாகத் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 12, 2026

தஞ்சை – காரைக்கால் புதிய ரயில் பாதை திட்டம்

image

தஞ்சை – திருவாரூர் – காரைக்கால் புதிய ரயில் பாதை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாராகிவிட்டதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இன்று உறுதி செய்துள்ளார். டெல்டா மாவட்டங்களின் வணிகம், சரக்கு போக்குவரத்து மற்றும் ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்த இத்திட்டம் பெரிதும் உதவும். விரைவில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவாகத் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News February 12, 2026

திருவாரூர்: மளிகை கடைக்காரரிடம் ரூ.10 லட்சம் மோசடி

image

தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரிடம் மர்மநபர் ஒருவர் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால், பணம் இரட்டிப்பாகும் என கூறியுள்ளார். இதை நம்பிய கார்த்திகேயன், சிறுக சிறுக ரூ.10,37,571 பணம் அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கார்த்திகேயன் திருவாரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 12, 2026

கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

image

சின்னசேலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கல்லாநத்தம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு போலீஸ் ராமதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஞானவேல் (53) என்பவர் 2.5 லிட்டர் சாராயம் வைத்து விற்றதையடுத்து அவரை கைது செய்தனர். சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

News February 12, 2026

அரியலூர்: 15 நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

image

அரியலூர் மண்டலத்தில் சம்பா பருவத்தில் அருள்மொழி, ஸ்ரீபுரந்தான், கார்குடி, கோவிந்தபுத்தூர், முத்துவாஞ்சேரி, திருமழபாடி, தூத்தூர், ஏலாக்குறிச்சி, திருமானூர், கீழகாவட்டான்குறிச்சி, குருவாடி, நமங்குணம், குழுமூர், சன்னாசிநல்லூர் மற்றும் த.கூடலூர் ஆகிய 15 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!