Tamilnadu

News February 12, 2026

விருதுநகர்: இனி அலைய தேவையில்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.

1. பான்கார்டு: NSDL

2. வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in

3. ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/

4. பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink

5. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News February 12, 2026

விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து தற்கொலை!

image

விழுப்புரம்: விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் மகள் பொம்மி(18). இவர், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். அவரை மீட்ட குடும்பத்தினர், மருத்துவமனையில் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, பெண்ணின் தந்தை வீரப்பன் அளித்த புகாரின் பேரில், அவரின் இந்த முடிவிற்கு காரணம் என்ன? என போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 12, 2026

திருத்தணியில் 9 மாத குழந்தை பரிதாப பலி!

image

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில் சலீம்(32). இவருக்கு, சீதா(27) என்ற மனைவியும், விதிசா என்ற 9 மாத குழந்தையும் உள்ளனர். கனகம்மாசத்திரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று(பிப்.11) பசியால் அழுத குழந்தைக்கு, தாய் சீதா தாய்ப்பால் கொடுத்தார். அப்போது, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

News February 12, 2026

காஞ்சிபுரத்தில் பெண் துடிதுடித்து பலி!

image

காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதா(34). இவர், நேற்று(பிப்.11) காவனூரில் மொபட்டில் பொத்தேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். பொத்தேரி ரயில் நிலையம் அருகே சாலையைக் கடக்க ஓரமாக நின்றார். இந்நிலையில், அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சரக்கு அட்டோ மீது மோதியது, அந்த சரக்கு ஆட்டோ, அருகே இருந்த மொபட்டில் மோதியது. இதில் படுகாயமடைந்த ராதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News February 12, 2026

கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவித்தார்!

image

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் டெலிவெரி செய்யும் இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர்கள் பயனடைய <>இங்கே <<>>கிளிக் செய்யவும். இதில், உறுப்பினராக சேர்ந்து நலத்திட்ட நிதிய உதவிகள் பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News February 12, 2026

திருநெல்வேலி: உங்களிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளதா..?

image

திருநெல்வேலி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 12, 2026

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்

image

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம். மாவட்ட கண்காணிப்பாளர்விஷ்வேஷ் பா. சாஸ்திரிதலைமையில் நடந்த முகாமில், கூடுதல் காவல்கண்காணிப்பாளர்முத்தமிழ்செல்வன் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர்ரவிச்சந்திரன் (மாவட்ட குற்ற பதிவேடு கூடம்) ஆகியோர் மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். முகாமில் 30 பேர் கலந்து கொண்டனர்.

News February 12, 2026

மல்லசமுத்திரம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே தீ விபத்து!

image

மல்லசமுத்திரம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே காலிநிலத்தில் இன்று (பிப்.11) மதியம் 2 மணியளவில், மர்ம நபர்கள் புகை பிடித்துவிட்டு புகைதுண்டை கீழே போட்டதில் இலைசருகுகள் மீது விழுந்து திடீரென தீபற்றியது. தகவலறிந்து வந்த ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்மணி மற்றும் சிறப்புநிலை அலுவலர் தண்டபாணி ஆகியோர் தீயை அனைத்தனர். இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

News February 12, 2026

உதயஞ்சாலை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

image

புதுவை ஒதியஞ்சாலை உதவிஆய்வாளர் ஆனந்தகுமார்
மற்றும் போலீசார் ரோந்து
பணியில் இருந்தனர்,
அப்போது மறைமலையடிகள்
சாலை, மற்றும் கண்டாக்டர் தோட்டம் சந்திப்பில் ஒரு வாலிபர் கத்தியை காட்டி பொதுமக்களை
மிரட்டிக் கொண்டிருந்தார்.
போலீசார் அவரை
பிடித்து விசாரித்ததில்
முகேஷ் (23) என்பது
தெரியவந்தது. இதனையடுத்து
போலீசார் அவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்

News February 12, 2026

தேனி மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!

image

தேனி மாவட்ட கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் ஏ.ஐ., தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், வெப் டெவலப்மெண்ட், ரோபோடிக் ஆட்டோமேஷன் உள்ளிட்ட 40 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நேரில் அல்லது 8001858687 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!