Tamilnadu

News February 12, 2026

குமரி: இன்றைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

குமரி மாவட்டம், தெங்கம்புதூர், இராஜக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.12) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிகட்டிபொட்டல், தர்மபுரம், பிள்ளையார்புரம், முருங்கவிளை, பண்ணையூர், தெக்குறிச்சி, பிள்ளைதோப்பு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT

News February 12, 2026

நாகை அருகே 7 மாத கர்ப்பிணி தற்கொலை

image

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி அனந்தநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல் மனைவி சக்தி பிரியா (29). 7 மாத கர்ப்பிணியான இவர், நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிந்துள்ள நிலையில், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News February 12, 2026

நாகை அருகே 7 மாத கர்ப்பிணி தற்கொலை

image

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சி அனந்தநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல் மனைவி சக்தி பிரியா (29). 7 மாத கர்ப்பிணியான இவர், நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிந்துள்ள நிலையில், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News February 12, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 14-ம் தேதி அரியலூர், உடையார்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் நியாயவிலை கடைகள் சம்பந்தமான குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

News February 12, 2026

அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 14-ம் தேதி அரியலூர், உடையார்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் நியாயவிலை கடைகள் சம்பந்தமான குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

News February 12, 2026

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

“பெரம்பலூர் மாவட்டத்தில் அறுவடை காலம் நடைபெற்று வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அறுவடையில் கிடைக்கும் பணத்தை வீட்டில் வைத்துவிட்டு வெளியூர் செல்ல வேண்டாம், வீடுகளில் அதிகளவில் பணம் வைத்திருப்பது திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும். எனவே பணத்தை பாதுகாப்பாக உங்களின் வங்கி கணக்குகளில் செலுத்தவேண்டும்.” என பெரம்பலூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

News February 12, 2026

புதுச்சேரி: பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழப்பு

image

நெல்லித்தோப்பு பகுதிக்கு உட்பட்ட சக்தி நகரைச் சேர்ந்தவர் சித்ரா (68). இவர் கந்துவட்டியால் மன உளைச்சலுக்கு ஆளாகி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் கடனளித்தவர்கள், சித்ரா வீட்டில் வந்து தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 12, 2026

நடுக்காவேரி: குடிநீரில் புழுக்கள் கலப்பால் மக்கள் கடும் அச்சம்

image

தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி கிழக்கு பகுதியில் பல மாதங்களாகக் குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்துப் புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. நோய் பரவும் முன் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என மக்கள் கோருகின்றனர். திமுக எம்பி ஊர் அருகிலேயே இந்நிலை இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News February 12, 2026

திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில், “சமூக வலைத்தளங்கள் மூலம் பரிசுகள், சலுகைகள் என்று அரசின் பெயரிலோ, முன்பின் தெரியாத எண்களிலிருந்தோ link, APK போன்று வரும் குறுஞ்செய்தியை கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் இதன் மூலம் உங்கள் விபரங்கள் திருடப்படலாம் எனவும் மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும்.” என திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

News February 12, 2026

புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி!

image

அறந்தாங்கி அருகே வல்லவாரி- யை சேர்ந்தவர் மதிவாணன் 30, (பிப்.12) எல்.என் புரத்தில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடல் கூறாய்வுக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவரது மனைவி கார்த்திகா 30, கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!