Mayiladuthurai

News August 4, 2024

காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

image

மயிலாடுதுறை எஸ்.பி மீனா அறிவுறுத்தலின்படி வெள்ள பாதிப்பால் மக்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் மீட்பு பணியில் பயிற்சி பெற்ற காவலர்களை ஒருங்கிணைத்து 10 குழுக்களாக பிரிந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளாக 13 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 4, 2024

ரேஷன் கடையில் பருப்பு, பாமாயில் இந்த மாதம் வழங்கப்படும்

image

ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத அட்டை தாரர்கள், இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம். ஜூன் மாதம் து.பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2,81,786 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெறாதவர்கள் இம்மாதம் பெறலாம்.

News August 4, 2024

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின்தடை

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்: மங்கனாம்பட்டு, கொள்ளிடம், ஆணைக்காரன் சத்திரம், தைக்கால், சீயாளம், குமிலங்காடு, துளசேந்திபுரம், புங்கனூர், பெருமங்கலம், கற்கோவில், மருவத்தூர், மருதங்குடி, அரூர், திட்டை, செம்மங்குடி, திருக்கருகாவூர், விநாயககுடி, கீழாநல்லூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை (திங்கள்) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.SHARE NOW

News August 3, 2024

மயிலாடுதுறை வழியாக முன்பதிவு இல்லா சிறப்பு ரயில்

image

திருச்சியில் இருந்து மயிலாடுதுறை வழியாக முற்றிலும் முன்பதிவு இல்லாத மெமூ ரயில் சென்னை செல்கிறது. (ஆகஸ்ட்.3) சனிக்கிழமை இரவு 10.30 திருச்சியில் இருந்து புறப்பட்டு மயிலாடுதுறைக்கு இரவு 12.35 வரும் இந்த ரயிலானது தாம்பரத்தை காலை 5:50 மணிக்கு சென்றடையும். சென்னை செல்வோர் இந்த இரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News August 3, 2024

இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்

image

சீர்காழி அருகே விளைந்திடசமுத்திரம் ஊராட்சியில் ஆம்புலன்ஸ் இல்லாத குறையை போக்கும் விதமாக, விளைந்திடசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ரமணி ராஜா தனது சொந்த செலவில் வாங்கப்பட்ட ஆம்புலன்சை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் விளைந்திடசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவையானது முற்றிலும் இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 96556 61700 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News August 3, 2024

திருமாவளவனுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவு ரத்து

image

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கில் ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் எம்பிக்கு கடந்த மாதம் 31ஆம் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட அன்றைய தினம் திருமாவளவன் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றதால் வழக்கில் ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்த நிலையில் பிடிவாரண்ட் உத்தரவு நேற்று திரும்பப் பெறப்பட்டது.

News August 3, 2024

மயிலாடுதுறை ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் இருந்து தினசரி மதியம் 12 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், மதுரை வழியாக செங்கோட்டை செல்லும். இந்த ரயிலானது ஆக. 8ஆம் தேதி ஒரு நாள் மட்டும் வழக்கமான பாதையில் செல்லாமல் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடி , மானாமதுரை ரயில் நிலையங்களில் நின்று விருதுநகர் வழியாக செங்கோட்டை செல்லும் என தெற்கு ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.

News August 2, 2024

மயிலாடுதுறை வந்த காவிரி தாய்

image

கொள்ளிடம் ஆற்றில் கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரானது இன்று மாலை வந்தடைந்தது. ஆடி பெருக்கு நாளை கொண்டாடவுள்ள நிலையில், இன்று காவிரி நீரானது தங்கள் பகுதிக்கு வந்ததை அடுத்து, அப்பகுதி மக்கள் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் நின்று காவிரி நீர் செல்வதை மகிழ்ச்சியாக கண்டுகளித்தனர்.

News August 2, 2024

மயிலாடுதுறை மக்களுக்கு இறுதி அழைப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2011க்கு முன் கட்டப்பட்ட அனுமதியற்ற கல்வி நிறுவன வரன்முறை திட்டத்திற்கு விண்ணப்பிக்க 31.01.2025 வரை கால நீட்டிப்பு செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனைபயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். இதுவே இறுதி வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.

News August 2, 2024

சீர்காழி: பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது

image

திருவெண்காடு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ ஆக பணியாற்றி வரும் கணேசன் மீது மர்ம நபர் நேற்று பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றார். பலத்த காயமடைந்த கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று பெட்ரோல் குண்டு வீசிய திருவெண்காடு பகுதியைச் சேர்ந்த கலைவேந்தன் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!