India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பழுதடைந்துள்ள 130 மீட்டர் நீளமுள்ள குழாய்களை மாற்றியமைக்கும் பணி நிறைவுற்று, அதனை இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதால் 1,317 கிராமங்களில் ( மாவட்டம் முழுவதும் ) குடிநீர் நிறுத்தப்படுகிறது. இன்று (மார்ச்.14) முதல் (மார்ச்.18) வரை 5 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது. பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <

மதுரை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் <

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் <

மதுரை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், மதுரையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய 398 சமையல் எரிவாயு சிலிண்டர்களை, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த பழனி, மதன்குமார் ஆகிய இருவரும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கேரளா கொல்லத்தை சேர்ந்த விஷ்ணுதாஸ் (27), வைரவ நத்தத்தில் உள்ள TVS வசூல் மையத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் எந்நேரமும் செல்போனில் பப்ஜி விளையாடி கொண்டிருந்தார். இதை உறவினர்கள் மற்றும் உடன் பணியாற்றுவார்கள் கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் வைரவ நத்தத்தில் உள்ள எஸ்பிஎம் பங்களாவில் தங்கி இருந்தவர் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சமயநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
⁍மதுரை: 9445000335
⁍மதுரை வடக்கு: 9445000336
⁍ மத்திய மதுரை: 9445000338
⁍மதுரை மேற்கு: 9445000339
⁍மதுரை கிழக்கு: 9445000340
⁍மேலூர்: 9445000341
⁍வாடிப்பட்டி: 9445000342
⁍உசிலம்பட்டி: 9445000343
⁍திருமங்கலம்: 9445000344
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!
Sorry, no posts matched your criteria.