India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப வளர்ச்சி நிலைய விரிவாக்க மையத்தில் ஒரு மாத கால இலவச தையல் மற்றும் அலைபேசி பழுதுநீக்கப் பயிற்சி வழங்கப்படுகிறது. பெண்களுக்கான தையல் பயிற்சியில் கவுன், ஜாக்கெட், சுரிதார் உள்ளிட்டவை கற்றுத்தரப்படும். 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு மற்றும் முன்பதிவுக்கு 70100 41455 எண்ணில் அழைக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் கணேசன் மகன் அபிதரன்(24). இவர் மதுரை ஒத்தக்கடையில் பண்னை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதை விட சிறந்த வேலை தேடி வந்தார் ஆனால் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்டவர். திருமங்கலத்தில் லாட்ஜ் ஒன்றில் இன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

மதுரையில் நடைபெறவுள்ள பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 12,000 காளைகள் மற்றும் 5,000 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் மூலம் 12,000க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போட்டியின் அளவையும் அதிரடியான முன்னேற்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

அவனியாபுரம் பெரியசாமி மனைவி ராக்கம்மாள்(25) காய்கறி கடையில் வேலை பார்த்தார். மனைவி மீது சந்தேகப்பட்டு கணவர் தகராறு செய்ய அதில் கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்கு மனைவி சென்று விட்டார். நேற்று செம்பூரணி ரோட்டில் உள்ள ரேசன் கடைக்கு பொங்கல் பரிசு வாங்க அவர் வர, அங்கு வந்து மனைவியை அழைத்து சென்று கத்தியால் சரமாரியாக குத்திய கணவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர்.

மதுரை, பெத்தானியாபுரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(26). இவர் +1 படிக்கும் மாணவியை கோச்சடையில் உள்ள கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்த திருப்பரங்குன்றம் மகளிர் நல அலுவலர் பத்மா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.

மதுரை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும், திருவள்ளுவர் தினமான ஜனவரி 16ம் தேதி ஆடு, மாடு, கோழி, மீன் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் பொது சுகாதார சட்டப்படி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி விற்க தடை செய்யப்பட்டுள்ளது.

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

மதுரையில் திருவள்ளுவர் தினமான 16ஆம் தேதி மாநகரில் இறைச்சி விற்க தடை அறிவிப்பு இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: திருவள்ளுவர் தினமான ஜனவரி 16ஆம் தேதி ஆடு, மாடு, கோழி, மீன் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் பொது சுகாதார சட்டப்படி சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.