India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

மதுரை தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி எம்.கே ஜமுனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், மதுரை தொழிலாளா் நீதிமன்ற பயன்பாட்டிலிருந்து கழிவு செய்யப்பட்ட கார்கள், வரும் பிப்.3ம் தேதி மாலை 4 மணிக்கு பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஏலம், தாமரைத்தொட்டி அருகேயுள்ள நீதிமன்ற நீதிபதி குடியிருப்பில் நடைபெறும். ஏலத்தில் பங்கேற்போர் ரூ.2000 முன்பணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது.

வாடிப்பட்டி அருகே சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் முத்து கருப்பன்(43). இவருக்கு சொந்தமாக லாரி உள்ளது. தினமும் மது போதையில் வீட்டிற்கு வந்ததை அவர் மனைவி கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மன அழுத்தம் அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு பலியானார். பாலமேடு போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்ட மக்களே, பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளை எளிதில் பெறலாம். பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

திருவாதவூர் அருகே உள்ள பனங்காடியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் மணிகண்டன்(21). நேற்று முன்தினம் மாலை இவர் டூவீலரில் மேலூர் மேலவளவு சாலையில் அதிவேகமாக சென்ற போது, சுக்காம்பட்டி அருகே வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். இது குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் முக்கிய இடங்களில், மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அரிட்டாபட்டி, குன்னத்தூர், திருவாதவூர், கல்லுப்பட்டி, கள்ளிக்குடி உள்ளிட்ட துணைமின் நிலையங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (ஜன.21) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என, மின் செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப உங்கள் பணிகளை திட்டமிட்டு கொள்ளுங்கள். SHARE IT..

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய கோரி தர்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிபதிகள் கூறியதாவது, இது இடைக்கால உத்தரவு; மலை உச்சியில் விழாவில் கலந்து கொள்ளும் கணக்கை காவல்துறை மற்றும் தொல்லியல் துறை முடிவு செய்யலாம்.

அ.வல்லாளபட்டி சாம்பிராணி பட்டியைச் சேர்ந்தவர் மூக்கன்(70). நேற்று மாலை தனது டூவீலரில் இவர் மேலூர், அழகர்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வேன் அழகாபுரி அருகே இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். மேலூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லபட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். வேன் டிரைவரை கைது செய்து மேலவளவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாஜகவின் 12வது தேசிய தலைவராக நிதின் நபின் இன்று காலை 11.30 மணியளவில் பதவியேற்று கொண்டார். பதவியேற்ற இன்றே அவர் திமுகவை சாடி, தன் கருத்தினை கூறியுள்ளார். அதில் “எதிர்க்கட்சிகள் இந்துகளின் பாரம்பரியத்திற்கு எதிராக செயல்படுகின்றன. தி.குன்றம் விவகாரத்தில் நீதிபதியையே எதிர்கட்சிகள் பதவி நீக்க முயற்சி”என்று தெரிவித்ததுள்ளார். இந்நிகழ்வில் பிரதமர் மோடி, அவர் தான் தலைவர் – நான் தொண்டன் என பேசியுள்ளார்.

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு<
Sorry, no posts matched your criteria.