Kanyakumari

News April 3, 2026

குமரி: விஷம் மாத்திரை சாப்பிட்டு ஒருவர் தற்கொலை

image

குமரி மாவட்டம், இரணியல் அருகே நுள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் வேலப்பன். இவர் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தென்னைக்கு வைக்கப்படும் விஷ மாத்திரையை வேலப்பன் சாப்பிட்டுள்ளார். உடனே சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News April 3, 2026

கூட்டறவு சங்க பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்றம்

image

பாகோடுு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் செல்லசாமி, இவரது பண பலன்களை வழங்காமல் கூட்டுறவுச்சங்கம் இழுத்தடிப்பு செய்து வந்தது. இந்நிலையில் இது குறித்து குழித்துறை நீதிமன்றத்தில் செல்லசாமி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டுறவு சங்க பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று அதிகாரிகள் கூட்டுறவு சங்க பொருட்களை ஜப்தி செய்தனர்.

News April 3, 2026

கூட்டறவு சங்க பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்றம்

image

பாகோடுு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் செல்லசாமி, இவரது பண பலன்களை வழங்காமல் கூட்டுறவுச்சங்கம் இழுத்தடிப்பு செய்து வந்தது. இந்நிலையில் இது குறித்து குழித்துறை நீதிமன்றத்தில் செல்லசாமி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டுறவு சங்க பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று அதிகாரிகள் கூட்டுறவு சங்க பொருட்களை ஜப்தி செய்தனர்.

News April 3, 2026

குமரியில் 16 பேர் வேட்பு மனு தாக்கல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நேற்று இரண்டாவது நாளாக வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் மொத்தம் 16 பேர் நேற்று வேட்புமான தாக்கல் செய்துள்ளனர். அதில் கன்னியாகுமரி – 3, நாகர்கோவில் -5, குளச்சல் -2, பத்மநாபபுரம் – 3, விளவங்கோடு – 3, கிள்ளியூர் தொகுதியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

News April 2, 2026

குமரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். SHARE IT

News April 2, 2026

நாகர்கோவில்: பதவியை ராஜினாமா செய்த மேயர்?

image

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக உள்ள மகேஷ் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில் மேயர் பதவியில் இருந்து விலகும் வகையில் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் இன்னும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.

News April 2, 2026

குமரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

குமரி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <>vptax.tnrd.tn.gov.in <<>>என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News April 2, 2026

குமரி: இலவச wifi வேண்டுமா?

image

குமரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News April 2, 2026

குமரி: இலவச wifi வேண்டுமா?

image

குமரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-Wani Wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News April 2, 2026

குமரி: தியாகிகளுக்கு நினைவு பூங்கா அமைப்போம் – ஹிம்லர்

image

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றவுடன் தெற்கெல்லை போராட்ட தியாகிகளை நினைவுகூரும் வகையில் நினைவு பூங்கா அமைக்கப்படும் என வேட்பாளர் ஹிம்லர் தெரிவித்துள்ளார். மேலும், போராட்ட வரலாறு மற்றும் நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் நூலகமும் உருவாக்கப்படும் என அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!