India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெய்வேலி வட்டம் மணிப்பூர் சாலையை சேர்ந்தவர் ரமேஷ் மகள் கனிஷ்கா (25). பட்டதாரியான இவருக்கும் சென்னையைச் சேர்ந்த கணேஷ் குமார் என்பவருக்கும் பிப்ரவரி 8ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென்று மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவருடைய தந்தை நெய்வேலி காவல் நிலையத்தில் இன்று அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கனிஷ்காவை தேடி வருகின்றனர்.

கடலூர் முதுநகர் சுனாமி நகரில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவிலை அடுத்த கஞ்சன்கொள்ளையை சேர்ந்தவர் குமார் (48). இவர் கஞ்சன் கொள்ளை ஆற்றில் அரசு அனுமதி இன்றி டிராக்டரில் மணல் திருடி விற்பனை செய்த குற்றத்திற்காக காட்டுமன்னார்கோவில் போலீசார் கைது செய்யப்பட்டார். இவர் மீது 3 மணல் திருட்டு வழக்குகள் உள்ள நிலையில், குமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க எஸ்பி பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.

கடலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருகிறதா?. <

கடலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <

கடலூர் மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் & பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் அழகுக்கலை பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் 10 ஆம் வகுப்பு முடித்து 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் பங்குபெறலாம். மேலும் பயிற்சி முடிந்து ஊதியமாக ரூ 18,000 முதல் 25,000 வரை வழங்கப்படும். இதற்கு <

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மண்டல அலுவலர்களை நியமித்துள்ளார். அதன்படி, திட்டக்குடி 27, விருத்தாசலம் 32, நெய்வேலி 24, பண்ருட்டி 26, கடலூர் 29, குறிஞ்சிப்பாடி 29, புவனகிரி 31, சிதம்பரம் 31, காட்டுமன்னார்கோவில் 29 என மொத்தம் 258 மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமித்துள்ளார். மேலும் இவர்கள் வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தவர்.

கடலூர் மாவட்ட கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு ஆட்கள் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 167 செ.மீ உயரம் உள்ள ஆண்கள் தேவனாம்பட்டினம் கடலோர காவல் நிலையத்தில் நாளை முதல் பி.25 வரை விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். SHARE IT.

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.