Cuddalore

News February 20, 2026

கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

கடலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 20, 2026

கடலூர்: அரசு பஸ் மோதி வாலிபர் பலி

image

விருத்தாசலம் அடுத்த கோ. பொன்னேரியைச் சேர்ந்தவர் கருப்புசாமி(37). இவர் நேற்று இரவு விருத்தாசலத்தில் இருந்து பொன்னேரி நோக்கி பைக்கில் சென்றார். அப்போது பொன்னேரி அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறீந்த விருத்தாசலம் போலீசார் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

News February 20, 2026

கடலூர்: அரசு பஸ் மோதி வாலிபர் பலி

image

விருத்தாசலம் அடுத்த கோ. பொன்னேரியைச் சேர்ந்தவர் கருப்புசாமி(37). இவர் நேற்று இரவு விருத்தாசலத்தில் இருந்து பொன்னேரி நோக்கி பைக்கில் சென்றார். அப்போது பொன்னேரி அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறீந்த விருத்தாசலம் போலீசார் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்தனர்.

News February 20, 2026

கடலூர்: கட்டாய திருமணத்தால் சிறுமி தற்கொலை

image

வேப்பூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், திருச்சி மாவ்ட்டத்தை சேர்ந்த இளைஞருக்கும் கடந்த மாதம் 20ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவரின் வீட்டில் இருந்து வெளியேறியே சிறுமியை, காவல்த்துறை கடலூர் அரசு காப்பத்தில் சேர்த்துள்ளார். பின்னர். தனது தந்தை வீட்டுக்கு சென்ற சிறுமி அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 20, 2026

கடலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

image

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் இருந்து மீனாட்சிப்பேட்டை பீடரில் நாளை(பி.21) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது. இதில் திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு, மெயின் ரோடு, சுப்பிரமணிய சுவாமி கோவில் தெரு, வைத்திமுதலி தெரு, பாட்டைவீதி, சப்தகிரி நகர், எம்ஜிஆர் நகர், ஜெயலலிதா நகர் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

News February 19, 2026

கடலூர்: வீடு தேடி வரும் ரேஷன் கார்டு – APPLY!

image

கடலூர் மக்களே, புது ரேஷன் கார்டு வேண்டுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். <>இங்கு க்ளிக் <<>>செய்து, உங்களது மொபைல் எண், முகவரி, மாவட்டம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் போதும். புதிய ரேஷன் கார்டு சில நாட்களில் உங்கள் வீடு தேடி வந்து சேரும். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள மறக்காம ஷேர் பண்ணுங்க!

News February 19, 2026

கடலூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

கடலூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை<> இங்கு கிளிக் <<>>செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 19, 2026

கடலூர்: வங்கியில் ACCOUNT இருக்கா? இத தெரிஞ்சுக்கோங்க!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

News February 19, 2026

கடலூரில் 2% அதிகம் பெய்த மழை!

image

கடலூர் மாவட்டத்தில் ஜன.1ஆம் தேதி முதல் இன்று பிப்ரவரி 19 ஆம் தேதி வரை இயல்பாக 35.9 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் மழை இயல்பை விட 2 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.

News February 19, 2026

சிதம்பரம்: அறிய வகை ஆந்தை மிட்பு

image

சிதம்பரம் மேட்டுத் தெருவில் இன்று(பிப்.19) காலை அரிய வகை ஆந்தை ஒன்று தென்பட்டது. இதனை அந்தப் பகுதியில் உள்ள குளத்தின் மேற்பார்வையாளர் சுரேஷ் பாதுகாப்பாக மீட்டு வைத்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அலுவலர்கள் விரைவில் வந்து ஆந்தையை கைப்பற்றி, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளனர். ஆந்தையை மீட்ட மேற்பார்வையாளரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

error: Content is protected !!