India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: CLICK <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

கடலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <

விருத்தாசலம் – தொழுதூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் ஆக்கணூர் அருகே நேற்று (பிப்.17) 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவர் கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி தலையில் ஏறியதால், சம்பவ இடத்திலே தலை நசுங்கி பலியானார்.மேலும் படுகாயத்துடன் 2 பேர் பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருத்தாசலம் ஆயியார் மடத்தெருவை சேர்ந்தவர் கருணாநிதி. தேமுதிக நகர பொருளாளரான இவர், விருத்தாசலம் நகரமன்ற கவுன்சிலராகவும் உள்ளார். இவரது மனைவி சத்யாவுக்கு(38) அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சத்யா வீட்டில் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 1 ஆம் தேதி முதல் இன்று பிப்ரவரி 17ம் தேதி வரை இயல்பாக 34.3 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இன்று வரை 36.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் மழை இயல்பை விட 7 சதவீதம் மழை அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று (பிப்.17) அறிவித்துள்ளது.

கடலூர் கேப்பர் மலையில் உள்ள மத்திய சிறையில் இன்று (பிப்.17) சிறை அலுவலர் பிரகாஷ் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள தொகுதி 16 பகுதியில் உள்ள பலா மரத்தடியில் ஒரு செல்போன் கிடந்தது. இதை பார்த்த போலீசார், அந்த செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார், செல்போனை பயன்படுத்தியது யார்? என விசாரித்து வருகின்றனர்.

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <

இந்திய அஞ்சல் துறை ‘POMIS’ எனும் பெயரில் சூப்பரான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால் போதும், முதலீடு செய்த பணத்திற்கேற்ப மாதந்தோறும் மிகச்சரியாக வட்டி வழங்கப்படும். எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வட்டியாக வழங்கப்படும். மேலும் 5 வருடங்களுக்கு பிறகு முதலீடு செய்த பணம் திருப்பி வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.