Cuddalore

News February 17, 2026

கடலூர்: 1,246 மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

கடலூரில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1,246 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News February 17, 2026

4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள்: ஆட்சியர் தகவல்

image

2026 சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரி, பணிக்கன் குப்பம் அண்ணா பல்கலைக்கழகம், தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரி, சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி ஆகிய 4 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

News February 17, 2026

கட;லூர்: SBI வங்கி வேலை APPLY NOW!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 17, 2026

கடலூர்: சமையல் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

image

திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலத்தை சேர்ந்தவர் அஞ்சலம் (37). இவர் வீட்டின் பின்புறம் விறகு அடுப்பில் சமையல் செய்தபோது எதிர்பாராத விதமாக புடவையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் உடல் முழுவதும் தீ பரவி எரிந்து படுகாயமடைந்த அஞ்சலம், திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

News February 17, 2026

கடலூர்: அரசு அலுவலருக்கு சிறை- கோர்ட் அதிரடி

image

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்தில் 2011-ல் சமூக நல விரிவாக்க அலுவலர் கலைச்செல்வி, ஊர் நல அலுவலர் இந்திராணி ஆகியோர் திருமண உதவித் தொகை வழங்க ரூ.1000 லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகினர். கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் நேற்று (பிப்.16) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் முதல் குற்றவாளி கலைச்செல்வி இறந்த நிலையில், 2-வது குற்றவாளியான இந்திராணிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News February 17, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.17) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

News February 17, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.17) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

News February 17, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.17) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

News February 17, 2026

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.17) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

News February 17, 2026

கடலூரில் 2,590 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு

image

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்தியா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
திட்டக்குடி 279, விருத்தாசலம் 317, நெய்வேலி 256, பண்ருட்டி 309, கடலூர் 258, குறிஞ்சிப்பாடி 278, புவனகிரி 304, சிதம்பரம் 298, காட்டுமன்னார்கோவில் 291, மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 2,590 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!