Coimbatore

News February 25, 2026

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

image

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த 30-வயது இளம்பெண் தனது தாயாருடன் தனியே வசித்து அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இளம்பெண் வீட்டில் தனியே இருப்பதை அறிந்த அதே துணிக்கடை ஊழியர் மகேஷ் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில் காட்டூர் போலீசார் மகேசை நேற்று கைது செய்தனர்.

News February 25, 2026

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

image

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்த 30-வயது இளம்பெண் தனது தாயாருடன் தனியே வசித்து அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இளம்பெண் வீட்டில் தனியே இருப்பதை அறிந்த அதே துணிக்கடை ஊழியர் மகேஷ் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். புகாரின் பேரில் காட்டூர் போலீசார் மகேசை நேற்று கைது செய்தனர்.

News February 24, 2026

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (24.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News February 24, 2026

அன்னூர்: ரீல்ஸ் மோகத்தால் சிக்கிய வாலிபர்

image

குப்பேபாளையம் நான்கு ரோடு சந்திப்பில் மது அருந்துவது போல் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சங்கர் கணேஷ் (26) என்ற இளைஞரை அன்னூர் போலீசார் கைது செய்தனர். பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுவெளியில் அநாகரீகமாக நடந்துகொண்டு ‘ரீல்ஸ்’ வெளியிடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை அமைந்துள்ளது.

News February 24, 2026

பொள்ளாச்சி அருகே கோர விபத்து: பெண் பலி

image

பொள்ளாச்சி – உடுமலை சாலையில் கோலார்பட்டி தனியார் பெட்ரோல் பங்க் அருகே சாலை விபத்து நிகழ்ந்தது. சாலையைக் கடக்க முயன்ற வள்ளியம்மாள் என்ற மூதாட்டி மீது, உடுமலையைச் சேர்ந்த தர்மராஜ் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் தலை மற்றும் காலில் பலத்த காயமடைந்த அவர், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 24, 2026

கல்விக்கடன் முகாம்: அறிவித்தார் கோவை கலெக்டர்

image

கோவை மாவட்டத்தில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் வரும் பிப்.26-ம் தேதி சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார். கல்விக் கடன் தேவைப்படும் மாணவர்கள், ஆதார் கார்டு, 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தையோ அல்லது அருகில் உள்ள முன்னோடி வங்கியை அனுகவும்.

News February 24, 2026

கோவை: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 24, 2026

கோவை: வாக்காளர்கள் கவனத்திற்கு!

image

கோவை மக்களே வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News February 24, 2026

காரமடை ரங்கநாதர் கோயில் திருவிழா தேதி அறிவிப்பு

image

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாத சாமி திருக்கோயிலின் மாசி மக தேர்த்திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து அன்ன, சிம்ம, அனுமந்த, கருட வாகனங்களில் எழுந்தருளும் ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தொடர்ந்து 1-ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம், 2-ம் தேதி மாலை திருத்தேர் வடம் பிடித்து நிகழ்வும் நடைபெற உள்ளது.

News February 24, 2026

காரமடை ரங்கநாதர் கோயில் திருவிழா தேதி அறிவிப்பு

image

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாத சாமி திருக்கோயிலின் மாசி மக தேர்த்திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து அன்ன, சிம்ம, அனுமந்த, கருட வாகனங்களில் எழுந்தருளும் ரங்கநாத பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தொடர்ந்து 1-ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம், 2-ம் தேதி மாலை திருத்தேர் வடம் பிடித்து நிகழ்வும் நடைபெற உள்ளது.

error: Content is protected !!