India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் மீதான கல்வீச்சு தாக்குதல் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கான செயல்பாட்டில் ஈடுபடும்போது நாகரீகத்தையும், மரியாதையையும் நிலைநாட்ட வேண்டும். அவர் விரைந்து குணமடைய விழைகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ.5,000 அளவிற்கு பயனடைவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வீட்டில் உள்ள முதியோருக்கு மாதம் ரூ.1,200, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000, புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000, இலவச பேருந்து மூலம் மாதம் ரூ.2,000 என மொத்தமாக ஒரு மாதத்திற்கு ரூ.5,000 வரை பயனடைகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகப் போட்டியில் விளையாடிய தனுஷ் கோட்டின் தனது முதல் போட்டியிலேயே மோசமான சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் 24 (31 பந்து) ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் RR அணிக்காக விளையாடிய வீரர்களில் குறைவான ஸ்ட்ரைக் ரேட் (77.41) பெற்ற வீரர்களின் வரிசையில் மூன்றாம் இடம் பிடித்து, மோசமான சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இரு இடங்களில் ஸ்மித் உள்ளார்.
ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களை இயக்கிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக வேட்பாளராக போட்டியிடும் திருமாவளவன், வீடு, வீடாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அமைச்சர் சிவசங்கர், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்டோர் திருமாவளவனை இன்று சந்தித்து பேசியுள்ளனர்.
பாஜக அரசு குறித்து சந்திரசேகர ராவ் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் ஏதாவது நல்லது நடந்துள்ளதா? என கேள்வி எழுப்பிய அவர், பெட்ரோல், டீசல் விலை என்ன? என்றார். பாஜகவில் இணைகிறாயா? சிறைக்கு செல்கிறாயா எனக் கேட்கிறார்கள். மோடியா? ED-யா? என்பதுதான் அரசியலா? நாடு எதை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
சனாதன தர்மம் எந்த ஒரு ஏற்றத்தாழ்வையும் வலியுறுத்தவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பாரதம் சனாதனத்தால் கட்டமைக்கப்பட்டதாக தெரிவித்த அவர், சனாதனம் வீழ்ந்தால் பாரதமும் வீழும் என்றார். உலக நாடுகளில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் பாரதம் பொருளாதார வளர்ச்சியோடு முன்னேறி வருகிறது எனத் தெரிவித்தார். சனாதனம் குறித்த பேச்சுகள் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தனக்கென தனி பாணியை வடிவமைத்துக் கொண்டவர்களில் இயக்குநர் பாலாவும் ஒருவர். அனைத்து காட்சிகளும் சரியாக வர வேண்டும் என்பதற்காக மெனக்கெடும் இவர், நடிகர்களையும் பாடாதபாடு படுத்திவிடுவார். இதன் காரணமாகவே வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியதாகவும் கூறப்படுகிறது. அருண் விஜய்யை வைத்து படப்பிடிப்பை தொடர்ந்த பாலா, தற்போது நிறைவு செய்துள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.,யின் கைசர்கஞ்ச் தொகுதிக்கு பாஜக இன்னும் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், அங்கு மீண்டும் சீட் கேட்டு அடம்பிடித்து வரும் பிரிஜ் பூஷண் சிங், காத்ரா தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு 25 முதல் 30 வாகனங்கள் புடைசூழ அனுமதியின்றி பயணித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை காலை 8:30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை ஏற்கெனவே வெளியிட்ட நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான அரசு தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
தர்மபுரியில் திமுக வெல்வது அவ்வளவு எளிதல்ல என திமுக எம்.பி செந்தில்குமார் ஆருடம் தெரிவித்துள்ளார். தனியார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “மக்களவைத் தேர்தலில் ஒருவேளை வன்னியர் சமூகத்தின் 80% வாக்குகளை பாமக பெறும்பட்சத்தில் பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் வாக்குகளை திமுக முழுமையாகப் பெற வேண்டும். ஆனால், அதிமுக தனி அணியாக நிற்கும் போது இது சாத்தியமாகுமா என தெரியவில்லை” என்றார்.
Sorry, no posts matched your criteria.