News May 1, 2024
குரூப்-1 தேர்வில் வென்ற பீடித்தொழிலாளி மகள்

தென்காசியைச் சேர்ந்த பீடிச்சுற்றும் தொழிலாளியின் மகள் ஸ்ரீமதி குரூப்-1 தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழக அரசில் காலியாக உள்ள குரூப் 1 அளவிலான 95 பணி இடங்களில் அவர், துணை ஆட்சியர், டி.எஸ்.பி., பதவிகளில் ஏதேனும் ஒன்றில் அதிகாரியாகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது விடாமுயற்சியால் 3ஆவது முறையாக தேர்வெழுதி வென்ற இவர், நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர் குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 7, 2025
குழந்தைகளுக்கு ஆபத்து.. இதை செய்யவே கூடாது!

குழந்தை பிறந்த ஒருசில வாரங்கள் வரை அவர்களுக்கு தொப்புள் கொடியின் ரணம் ஆறாமல் இருக்கும். அதன்மூலம் அவர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே தொப்புளை ஈரமாக வைத்திருக்காதீர்கள். டயப்பர் மாட்டும்போது தொப்புள் மீது உரசாமல் பார்த்துக்கொள்ளுங்கள் தொப்புள் கொடி சிவந்து போய் இருந்தாலோ, துர்நாற்றம் வீசினாலோ அலட்சியம் வேண்டாம். உடனடியான டாக்டரை அணுகுங்கள். SHARE.
News December 7, 2025
இதற்கு அண்ணாமலை ஆவண செய்வாரா? பெ.சண்முகம்

திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கானது என அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில், இந்துக்கள் என்பது அனைத்து இந்துக்களுக்கு மட்டுமா (அ) குறிப்பிட்ட சாதி இந்துக்களுக்குமா என CPM பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். இந்துக்கள் என்று சொல்லி எத்தனை காலத்துக்கு ஏமாற்றி பிழைப்பீர்கள் என்றும் சாடியுள்ளார். கருவறைக்குள் பட்டியலின இந்துக்கள் பூஜை செய்ய அண்ணாமலை ஆவண செய்வாரா என்றும் சண்முகம் கேட்டுள்ளார்.
News December 7, 2025
கள்ளக்காதல் என்ற ஒன்று இல்லை: சேரன்

பெண்ணைதான் காதலிக்க வேண்டும் என்று இல்லை, எந்த ஒரு உயிரின் மீது அன்பு வைத்தாலும் அது காதல்தான் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், காதலில் நல்ல காதல், கள்ளக்காதல் என்றெல்லாம் இல்லை எனவும் விளக்கம் கொடுத்தார். சமூகம் நம் மீது செலுத்தும் ஆதிக்கம்தான் கள்ளக்காதல் எனவும், யாரை காதலிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ காதலித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.


