news

News May 1, 2024

ஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்

image

மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும், அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பம் செய்து காத்திருக்கும் 2.24 லட்சம் குடும்பங்களுக்கும், ஸ்மார்ட் கார்டு தொலைந்தவர்கள், திருத்தம் செய்தவர்களுக்கும் புதிய கார்டு தடையின்றி கிடைக்கும் எனத் தெரிகிறது.

News May 1, 2024

ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க இபிஎஸ் வலியுறுத்தல்

image

ஏற்காடு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அவர், உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விபத்தில் 6 பேர் பலியான நிலையில், 60க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

News May 1, 2024

லோகேஷ் கனகராஜ் சட்டச் சிக்கலை எதிர்கொள்வாரா?

image

லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய ‘விக்ரம்’, தயாரித்த ‘பைட் கிளப்’ போன்ற படங்களில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியுள்ளார். இப்போது ‘கூலி’ டீசரில் அனுமதி பெறாமல் தங்கமகன் படப் பாடலையும் மறுஉருவாக்கம் செய்து வெளியிட்டுள்ளார். காப்புரிமை சட்டத்தை மீறி இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதால், அவர் மீது இளையராஜா தரப்பு கோபத்தில் உள்ளதாம். இதனால் அவரும் சட்டச்சிக்கலை எதிர்கொள்ளலாமெனக் கூறப்படுகிறது.

News May 1, 2024

1 கோடி முறை கோவிந்தா நாமம் எழுதி மாணவி சாதனை

image

1 கோடி முறை ‘கோவிந்த கோடி’ எழுதிய கீர்த்தனா என்ற பெண் திருமலையில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். 2023 நவராத்திரியில் எழுதத் தொடங்கியதாக தெரிவித்த அவர், சிறுவயது முதலே ஏழுமலையானை இருவேளையும் வழிபடுவதாகக் கூறினார். ஆன்மிகத்தை வளர்க்க ‘கோவிந்த கோடி’ திட்டத்தை திருமலை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 1 கோடி முறை கோவிந்த கோடி எழுதுபவர்களுக்கு விஐபி தரிசன சலுகை அளிக்கப்படுகிறது.

News May 1, 2024

சீரியலைப் பார்த்து திருடிய சிறுவன்

image

குஜராத் மாநிலம் சூரத்தில் 13 வயது சிறுவன் ‘C.I.D’ டிவி சீரியலால் கவரப்பட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளார். சீரியலில் வருவதுபோல, பைப்பைப் பயன்படுத்தி 2 தளங்கள் இறங்கிய அச்சிறுவன், அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைத் திருடியுள்ளார். குளியலறையில் இருந்த கால் தடங்களால் சிறுவன் சிக்கிய நிலையில், செல்போன் வாங்க திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

News May 1, 2024

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சம்

image

ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத சாதனை அளவாக ₹2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் வசூலானதை விட 12.4% அதிகமாகும். மத்திய ஜிஎஸ்டியாக ₹43,846 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ₹53,538 கோடியும் வசூலாகியுள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனைகளில் வலுவான அதிகரிப்பாக 13.4% வரையும், இறக்குமதிகளில் 8.3% வரையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 1, 2024

குரூப்-1 தேர்வில் வென்ற பீடித்தொழிலாளி மகள்

image

தென்காசியைச் சேர்ந்த பீடிச்சுற்றும் தொழிலாளியின் மகள் ஸ்ரீமதி குரூப்-1 தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழக அரசில் காலியாக உள்ள குரூப் 1 அளவிலான 95 பணி இடங்களில் அவர், துணை ஆட்சியர், டி.எஸ்.பி., பதவிகளில் ஏதேனும் ஒன்றில் அதிகாரியாகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது விடாமுயற்சியால் 3ஆவது முறையாக தேர்வெழுதி வென்ற இவர், நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர் குறிப்பிடத்தக்கது.

News May 1, 2024

ED-யின் அடாவடித்தனத்தை ஏற்க முடியாது

image

அமலாக்கத்துறையின் அடவடித்தனமான செயல்பாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னெ கண்டனம் தெரிவித்துள்ளார். ED-க்கு எதிரான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி, சாமானியர்களை துன்புறுத்துவதை எந்த விதத்திலும் ED நியாயப்படுத்த முடியாது என்ற அவர், நீதிமன்றத்திற்கும், சட்டத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை அமலாக்கத்துறைக்கு உள்ளது என்று சாடினார்.

News May 1, 2024

தேர்தல் ஆணையத்தை எதிர்த்து ஜனசேனா வழக்கு

image

கட்சியின் சின்னத்தை சுயேச்சைகளுக்கு ஒதுக்கியதை எதிர்த்து ஜனசேனா கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அக்கட்சியின் சின்னமான கண்ணாடி டம்ளர் சின்னத்தை ஜனசேனா போட்டியிடாத தொகுதிகளில் சுயேச்சைகளுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் இன்று பதிலளிக்க உள்ளது. பாஜக கூட்டணியில் அக்கட்சி, 21 சட்டப்பேரவை மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது.

News May 1, 2024

தண்ணீர் பந்தல் திறக்க தடையில்லை

image

தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தல் திறக்க தடையில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில், அரசியல் கட்சிகள் மாநிலம் முழுவதும் தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கம். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி தண்ணீர் பந்தல் அமைக்கவும், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதனைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!