news

News April 27, 2025

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணி குடிக்குறீங்களா?

image

பிளாஸ்டிக் நம் வாழ்வின் அன்றாட பகுதியாகிவிட்டது. ஆனால், பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடித்தால், மாரடைப்பு வரும் அபாயம் இருக்கிறது என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் போது, அதிலிருக்கும் நுண்ணிய பிளாஸ்டிக்கான Bisphenol A, Phthalates ரசாயனங்கள் உடலில் நுழைகின்றன. இதனால், ரத்த அழுத்தம் அதிகரிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படலாம். இனி கொஞ்சம் கவனமாக இருங்க!

News April 27, 2025

மாற்றப்படும் அமைச்சரவை.. வெளியான புதிய தகவல்!

image

தமிழக அமைச்சரவை மாற்றம் உறுதியாகியுள்ளது. உதகையிலிருந்து நாளை சென்னை திரும்புவதாக இருந்த கவர்னர் ஆர்.என்.ரவி அவசர பயணமாக சென்னை திரும்பியுள்ளார். இதனிடையே, தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் வசம் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News April 27, 2025

தலைமறைவான பாகிஸ்தான் ராணுவ தளபதி?

image

இந்தியா – பாக்., இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பாகிஸ்தானின் ராணுவ தளபதி காணாமல் போயிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. சையத் அசிம் முனிர் இன்னும் பொதுவெளியில் எதுவுமே பேசவில்லை என்பதை சுட்டிக்காட்டி இத்தகவல் பேசப்படுகிறது. அவர் தனது குடும்பத்தினருடன் லண்டனுக்கு சென்று தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. முக்கியமான நேரத்தில் ராணுவ தளபதி தலைமறைவாகி இருப்பது பற்றி நீங்க என்ன சொல்றீங்க?

News April 27, 2025

செந்தில் பாலாஜி திடீர் ட்விஸ்ட்.. CM ஸ்டாலினிடம் வேண்டுகோள்!

image

அமைச்சர் பதவியிலிருந்து விலகவுள்ள செந்தில் பாலாஜி CM ஸ்டாலினிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனக்குப் பதிலாகத் தனது தீவிர ஆதரவாளரும், அரவக்குறிச்சியில் அண்ணாமலையை தோற்கடித்தவருமான இளங்கோவுக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கக் கோரியுள்ளாராம். இதனால், கரூரில் அமைச்சர் பிரதிநிதித்துவம், இருப்பதோடு கட்சியைப் பலப்படுத்த உதவியாக இருக்கும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

News April 27, 2025

எம்.சாண்ட் விலை ₹1000 குறைகிறது

image

கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் M-சாண்ட், P-சாண்ட் ஆகியவற்றின் விலையை குறைத்து விற்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கல் குவாரி, க்ரஷர், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரின் கூட்டம் இன்று காலை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடத்தப்பட்டது. அப்போது, M-சாண்ட் விலையை மெட்ரிக் டன்னுக்கு ₹1000 குறைத்து விற்க விற்பனையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதனால், கட்டுமானப் பணிகள் விறுவிறுப்படையும்.

News April 27, 2025

ரேஷன் பருப்பில் கலப்படமா? ஆய்வு செய்ய உத்தரவு

image

ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட இருந்த பருப்பில் கலப்படம் செய்யப்பட்டதை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அண்மையில் கண்டுபிடித்தார். இதுதொடர்பாக 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்திகள் வெளியானதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வாணிப கிடங்குகள், ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து, பருப்பின் தரத்தை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

News April 27, 2025

ஆபீசை மூடிட்டு கிளம்பிய சிறுத்தை சிவா!

image

திரைத்துறையில் ஜாதகம், ராசி நட்சத்திரம் போன்ற சென்டிமென்ட் உண்டு. அப்படிதான் ‘கங்குவா’ படத்திற்கு பிறகு இந்த இடம் ராசியில்லை என சிறுத்தை சிவா, தனது ஆபீசை காலி செய்து விட்டாராம். அவர் வீரம் படத்தின் வேலைகளை தொடங்கியதில் இருந்தே அந்த ஆபீசில் தான் இருந்தாராம். இரு படங்கள் வரிசையாக தோல்வி என்றாலும், வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற பிளாக் பஸ்டர் படங்களை அந்த ஆபீசில் இருக்கும் போது தானே எடுத்தார்!

News April 27, 2025

சூழும் போர் மேகம்..அமித்ஷா-BSF இயக்குநர் சந்திப்பு

image

இந்தியா-பாக். எல்லையில் பதற்றம் நிலவிவரும் நிலையில், எல்லை பாதுகாப்பு படையின்(BSF) இயக்குநர் தல்ஜித் சிங் சௌதரி, உள்துறை அமைச்சகத்துக்கு வருகை தந்துள்ளார். முன்னதாக, பாக். எல்லையில் உள்ள விவசாயிகள் பயிர்களை 48 மணி நேரத்திற்குள் அறுவடை செய்ய வேண்டுமென BSF காலக்கெடு விதித்திருந்தது. இந்நிலையில், உள்துறை அமைச்சகத்துக்கு BSF இயக்குநரின் வருகை, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

News April 27, 2025

இன்றே கடைசி…வெளியேறும் பாகிஸ்தானியர்கள்

image

ஐதராபாத்தில் உள்ள 213 பாகிஸ்தானியர்களும் இன்றே சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டுமென ஹைதராபாத் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டுமென அமித்ஷா உத்தரவிட்டார். இந்நிலையில், ஹைதராபாத்தில் சுற்றுலா-மருத்துவ விசாவில் தங்கியுள்ள 213 பேரின் விசாக்கள் ரத்தாகின. இரவுக்குள் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுகின்றனர்.

News April 27, 2025

நடிகர் நாகேந்திரன் திடீர் மரணம்.. காரணம் இதுதான்

image

காவல் படத்தை இயக்கியவர், நாகேந்திரன். சில படங்களிலும் இவர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். நேற்று நாகேந்திரன் திடீரென மரணம் அடைந்தார். இவரின் மறைவுக்கு மாரடைப்பே காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து இளம் கலைஞர்கள் மரணமடைவது, தமிழ்த் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் தான் பாரதிராஜா மகன் மனோஜ், மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!