India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ADMK, BJP மீண்டும் கூட்டணி அமைத்தது முதலே ‘கூட்டணி ஆட்சி’ என்ற குரல் பாஜகவில் ஒலித்து வருகிறது. ஆனால், தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று EPS பேசியதால் குழப்பம் அதிகரித்தது. இந்நிலையில், NDA கூட்டணியின் தமிழக தலைவர் EPS தான், அவரே CM வேட்பாளர் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலுக்கு பிறகு EPS எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் அவர் கூறியுள்ளார்.
வங்கிகளில் முதல் முறை கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. முதல் முறை கடன் பெறும் பலர் இந்த சிக்கலால் தவித்த நிலையில் அதற்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. ஆனாலும் கடன் பெறுவோரின் நடத்தை பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
✦செரிமானத்தை அதிகரித்து, உடலை வலுவாக்க உதவுகிறது.
➥முகம் தரையை பார்க்கும்படி கை, கால்களை நீட்டியபடி படுத்துக் கொள்ளவும்.
➥மெதுவாக கால்களை பின்புறத்தில், மேல்நோக்கி உயர்த்தவும். அதே நேரத்தில், தலை & கைகளையும் உயர்த்தி, பின்னோக்கி நீட்டி, கால்களை பிடிக்கவும்.
➥உடலை வில் போல் வளைத்து பிடித்து, 15- 20 விநாடிகள் வரை இந்த நிலையில் இருந்துவிட்டு, பிறகு பழைய நிலைக்கு திரும்பவும்.
SA 20 லீக் தொடரில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே IPL-ல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் இயக்குநராக இருந்த அவர் தொடர் தோல்வியால் வெளியேறினார். இந்தியாவுக்கு கேப்டனாக பல சாதனைகள் படைத்த கங்குலி, பயிற்சியாளராக தடம் பதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கள அரசியலில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு, சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் செல்லும் என்று விஜய் பதிலளித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய சரத்குமார், இந்த சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் போகுமாம், பின்பு படுத்து தூங்கி விடுமாம் என்று விமர்சித்துள்ளார். சிங்கம் சிங்கமாக இருக்க வேண்டும், தூங்கக்கூடாது என்றும் அவர் சாடியுள்ளார். விஜய்யின் அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?
நாகர்கோவில் அருகே உள்ள கேரளபுரம் என்ற கிராமத்தில் அதிசய விநாயகர் கோயிலில், விநாயகரின் சிலை 6 மாதத்திற்கு ஒரு முறை நிறம் மாறுகிறது. மார்ச் – ஜூனில் விநாயகர் கருப்பாகவும், ஜூலை – பிப்ரவரியில் விநாயகர் வெள்ளை நிறமாகவும் மாறுகிறார் என கூறப்படுகிறது. மேலும், கோயில் கிணற்றின் நீர், விநாயகர் வெள்ளையாக இருக்கும் போது கருப்பாகவும், விநாயகர் கருப்பு நிறமாக இருக்கும்போது வெள்ளை நிறமாகவும் மாறுகிறதாம்.
ADMK கூட்டணியில் இல்லை என உறுதிபட தெரிவித்துள்ள கிருஷ்ணசாமி அப்படி ஒரு கூட்டணி இருக்கிறதா என கிண்டல் செய்துள்ளார். விஜய்யின் மதுரை மாநாடு நல்ல எழுச்சி என புகழாரம் சூட்டினார். மேலும், அங்கிள் என கூறியது தவறு என்றால் டாடி, BRO என கூறுவது சரியா என கேள்வி எழுப்பினார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த புதிய தமிழகம் வரும் தேர்தலில் தவெகவுடன் இணையலாம் என பேசப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
சிலரின் அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை முடக்குவது நல்லதல்ல என அமித்ஷா தெரிவித்துள்ளார். சட்டசபை சபாநாயகர்கள் மாநாட்டில் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் குறைந்தால் தேசத்தின் வளர்ச்சியில், அதன் பங்களிப்பு பாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் நிதானமாக இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் அவையை நடத்த அனுமதிக்காமல் இருப்பது நல்லதல்ல என தெரிவித்தார்.
வாக்குரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி பிஹாரில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் யாத்திரையில், வரும் 27-ம் தேதி CM ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், பிஹாருக்கு தமிழக CM வருவதால் என்ன மாற்றம் இங்கு நிகழ்ந்துவிட போகிறது? அவரின் வருகையால் பிஹார் முன்னேறிவிடுமா என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹார் பிரச்னைகளுக்கு இங்குதான் தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
விஜய்சேதுபதியின் நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘உப்பெனா’ என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் கீர்த்தி ஷெட்டி அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகையாக உயர்ந்த அவர், தமிழிலும் இப்போது பிஸியாக உள்ளார். இதற்கு இடையில் இன்ஸ்டாவில் தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதை கீர்த்தி மறப்பதில்லை. சமீபத்தில் முகத்தை செல்போனால் மறைத்தபடி, அவர் பகிர்ந்துள்ள செல்பி போட்டோக்களால் இளசுகள் சொக்கிப்போயுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.