India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இலங்கை தமிழரின் உரிமையை பாதுகாக்க உரிய தூதரக நடவடிக்கையை PM மோடி எடுக்க வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த கடிதத்தில் அவர் இலங்கை அரசு இனப்பிரச்னையை தீர்க்கும் போர்வையில், ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக சாடியுள்ளார். இது ஒற்றையாட்சி முறையை வலுப்படுத்துவதால், அரசியல் சுயாட்சிக்கான தமிழரின் நியாயமான எண்ணங்கள் புறக்கணிக்கப்படலாம் என சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ உலகமெங்கும் 1000-க்கும் அதிகமான தியேட்டர்களில் நேற்று வெளியானது. இந்நிலையில், ஒரே நாளிலேயே ‘பராசக்தி’ சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்துள்ளது. சிலமணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கானோர் அதை டவுன்லோட் செய்து பார்த்துள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுமாதிரியான சட்டவிரோத செயலை தவிர்க்கும்படி படக்குழுவும், தியேட்டர் உரிமையாளர்களும் அறிவுறுத்துகின்றனர்.

2026 தேர்தலில் திமுக கூட்டணியில் கொ.ம.தே.க தொடருவதாக கொங்கு ஈஸ்வரன் அறிவித்துள்ளார். மேலும், ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். ஸ்டாலின் நடத்திய ஒன் டூ ஒன் சந்திப்பில், திருச்செங்கோட்டில் கொ.ம.தே.க பதில் திமுகவே போட்டியிட வேண்டும் என திமுக நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்தனர். இதனால், ஈஸ்வரன் கூட்டணி மாறலாம் என கூறப்பட்ட நிலையில், இவ்வாறு அறிவித்துள்ளார்.

நார்வேயின் சோமராய் தீவில் சுமார் 69 நாள்கள் சூரியன் மறையாதாம். மே 20 முதல் ஜூலை 18 வரை, நள்ளிரவு 12 மணி என்றாலும் பகல் போலவே இருக்கும். இதை Midnight Sun என்கின்றனர். இதற்கு நேர்மாறாக நவ., -ஜன., வரை இருள் மட்டுமே நிலவும். Polar Night என அழைக்கப்படும் இந்த சீசனில் சூரிய ஒளியே இருக்காது. இத்தீவு வடதுருவத்தின் மிக அருகில் இருப்பதுதான் இதற்கு காரணமாம். மூன்று மாதம் இரவாகவே இருந்தால் எப்படி இருக்கும்?

‘ஆட்சியில் பங்கு’ என்ற முழக்கத்தை வைத்து திமுகவுக்கு காங்., நெருக்கடி கொடுப்பதுபோல் அதிமுகவுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் தமாகா சமீபத்தில் இணைந்துள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் யுவராஜா, அதிமுக ஆட்சி அமைத்தாலும், அது ‘கூட்டணி ஆட்சி தான்’ என்றும், 2026 -ல் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று EPS முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

₹87,000 கோடிக்கு அதிபதியான Shriram Group குழுமத்தின் நிறுவனர் ராமமூர்த்தி தியாகராஜன், தனது ஊழியர்களுக்காக வாரி வழங்கியுள்ளார். நிறுவனத்தில் தனது பங்கான ₹6,210 கோடியை அவர், Shriram Ownership Trust-க்கு எழுதி வைத்துள்ளார். எளிமையான வாழ்க்கையே விரும்பும் ராமமூர்த்தி தியாகராஜனின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் ஒருபுறமும், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றொருபுறமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், பணி நிரந்தரம் கோரி தூய்மை பணியாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு முக்கிய வாக்கு வங்கியாக பார்க்கப்படும் அரசு ஊழியர்களின் போராட்டங்கள் ஆளும் திமுக அரசுக்கு புதிய சிக்கலை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?

SK-வின் ‘பராசக்தி’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ₹27 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தது. இதனால், ‘அமரன்’ படத்தின் முதல் நாள் (₹42.3 Cr) வசூலை விட, குறைவாகவே பராசக்தி வசூல் செய்துள்ளது. இருப்பினும், பொங்கலுக்கு தொடர் விடுமுறை வருவதால், வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்தூரை சேர்ந்த ஸ்கூல் டீச்சரிடம், AI மூலம் அவரின் Cousin-ன் குரலில் பேசி ₹97,500-ஐ சிலர் சுருட்டியுள்ளனர். இருவரும் 2 ஆண்டுகளாக தொடர்பில் இல்லாதபோதும், அவசர மருத்துவ தேவை என்பதால், QR கோடு மூலம், இவரும் கேட்ட பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், உடனே நம்பர் பிளாக் செய்யப்பட்டுள்ளது. பிறகு Cousin-னிடம் பேசிய போதுதான், ஏமாற்றப்பட்டதை டீச்சர் உணர்ந்துள்ளார். உங்களுக்கு இப்படி போன் வரலாம். கவனமா இருங்க!

திருச்சி கருங்குளத்தை சேர்ந்த ஜெனிபருக்கும், அவரது கணவருக்கும் இடையே தமிழக அரசு அறிவித்த ₹3000 பொங்கல் பரிசுத் தொகையை யார் வாங்குவது என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே சண்டை முற்றிய நிலையில், மனமுடைந்த ஜெனிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடலை கைப்பற்றி, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.