India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யக் கூடும். இதனால், சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பதிப்புரிமை தொடர்பாக ஒப்பந்தம் செய்யாத இளையராஜா தனது பாடல்களுக்கு உரிமை கோர முடியாது என்று எக்கோ நிறுவனம் கூறியுள்ளது. பாடல் உரிமை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் மேல் முறையீடு வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஊதியம் கொடுத்து இசை சேவையைப்பெறும் தயாரிப்பாளரே முதல் காப்புரிமை உரிமையாளர்” என வாதிட்டார்.

விராட் கோலியின் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நாட்டிற்காக பல வெற்றிகளைப் பெற்று தந்த கோலிக்கு, எப்படி விளையாட வேண்டுமென நன்றாக தெரியுமெனக் கூறிய அவர், ஒன்றிரண்டு ஆட்டங்களில் தடுமாறியதற்காக கோலிக்கு புற அழுத்தம் தர வேண்டாம் என்றார். பொறுமையுடன் விளையாடினால் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் எனக் கூறியுள்ளார்.

இத்தாலியில் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அபுலியா நகரில் இன்று தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில், ஜி7 நாடுகளில் இடம்பெறாத இந்தியாவுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார். ஜி7 நாடுகளில் உள்ள கனடா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய 4 நாடுகளைவிட ஜிடிபியில் இந்தியா முன்னிலை வகிப்பதே காரணமாக கருதப்படுகிறது.

அரசு மாதிரிப் பள்ளிகளில் பணிபுரியும் நூலகர் உள்ளிட்ட தொகுதிப்பூதிய பணியாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 44 மாதிரிப் பள்ளிகளில் நூலகர் உள்பட மொத்தம் 308 பணியிடங்கள் உள்ளன. இதில், இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர்களுக்கு ₹6,000இல் இருந்து ₹12,000ஆகவும், பிற பணியாளர்களுக்கு ₹4,500இல் இருந்து ₹10000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட விவகாரம் மத்திய அரசின் திறமையின்மையை காட்டுவதாக முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார். MBBS படிப்புக்கு தேர்வை தீர்மானிப்பதில் மாநில அரசு பங்கு வகிக்க வேண்டும் என்ற அவர், மாநில அரசின் பங்கை மீட்பதுதான் ஒரே தீர்வாக இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் மூலம் முக்கிய பிரச்னைகளிலிருந்து திசை திருப்ப அனுமதிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குவைத் அடுக்குமாடி தீ விபத்தை தொடர்ந்து, அந்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் வசிப்பிடம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. ஆனால், பெரும்பாலான இடங்கள் தங்குவதற்கு வசதியாகவே இருக்கும் என குவைத் வாழ் தமிழக தொழிலாளர்கள் கூறுகின்றனர். ஒரு அறையில் இருவர்தான் தங்குவார்கள் என்பதால் பெரிய நெருக்கடி இருக்காது என தெரிவிக்கின்றனர். அதே நேரம், சில இடங்கள் மோசமாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு செலுத்தப்படும் அமெரிக்க நாணயம் ‘பெட்ரோடாலர்’ என்று அழைக்கப்படுகிறது. 1972இல், தங்கத்திற்கு பதிலாக அமெரிக்கா பெட்ரோடாலரை அறிமுகப்படுத்தியது. ஜூன் 8, 1974 இல் பொருளாதார ஒத்துழைப்புக்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்ட சவுதி இதனை ஏற்றது. உலக வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கம் இன்றுவரை தொடர்வதற்கு இந்த ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கிறது.

துணை நடிகர் பிரதீப் கே.விஜயன், குளியலறையில் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தனியாக வசித்து வந்த அவருக்கு, மூச்சுத் திணறல் பிரச்னை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முதல் அவரை தொடர்பு கொண்ட நண்பர்கள், அவரிடம் இருந்து பதில் வராததால் காவல்துறையை நாடியுள்ளனர். இதையடுத்து, போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தன்னை துன்புறுத்துவதை கண்டித்து, சவுக்கு சங்கர் 2 நாள்கள் சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்ததாக, அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சவுக்கு சங்கர் மீதான வழக்கை சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் நடத்தி வருவதாகவும், ஆனால், சிறையில் சவுக்கு சங்கர் கொடுமைக்கு உள்ளாவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.