Virudunagar

News October 12, 2024

ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையில் 28 பேர் நீக்கம்

image

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமெண்ட் ஆலையில் 28 தற்காலிக பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிமெண்ட் ஆலை புனரமைக்கப்படாமல் உற்பத்தி படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில், தற்போது 28 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News October 11, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் 2024 அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் அக்டோபர் 18 அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்தார்.

News October 11, 2024

சாத்தூர் பெண்ணிடம் சினிமா பட பாணியில் மோசடி

image

சாத்தூரை சேர்ந்தவர் சிங்கராணி 39. இவரிடம் மதுரையை சேர்ந்த அருண், முருகன் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் தருவதாக ரூ.7.50 லட்சம் பெற்றுள்ளனர். பணத்தை பெற்ற அருண் ஆயில் நிரப்பிய பிளாஸ்டிக் கேனை சிங்கராணியிடம் கொடுத்து இந்த கருப்பு நிற ஆயிலை ஊற்றினால் ரூபாய் நோட்டாக மாறும் என நம்ப வைத்தனர். வீட்டில் சென்று சோதித்த போது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை.

News October 11, 2024

வானிலை எச்சரிக்கைகளை முன் கூட்டியே அறிய வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவமழை 2024 வானிலை முன்னெச்சரிக்கைகளை மக்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள தமிழக அரசால் டிஎன் அலார்ட் என்ற கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியின் மூலம் மக்கள் அனைவரும் வெப்பநிலை, மழை போன்ற வானிலை அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

News October 11, 2024

214 பட்டாசு பெட்டிகள் பறிமுதல்

image

சிவகாசி அருகே மீனம்பட்டி ரத்தினபுரிநகர் பகுதியில் கிழக்கு போலீஸ் காவல் நிலைய எஸ்.ஐ ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள குடோனில் உரிய அனுமதியின்றி 214 பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அந்த பெட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் சித்துராஜபுரத்தை சேர்ந்த அறிவுசெல்வம் (67) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

News October 11, 2024

பட்டாசு ஆலை விபத்தில் பெண் பலி

image

சிவகாசி அருகே செவலூரில் கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று மாலை இடி, மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியில் இருந்த காந்தியம்மாள் (73) என்ற பெண் தொழிலாளி 100 சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News October 10, 2024

தோட்டக்கலை விருதுபெற அழைப்பு

image

இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் வழங்கப்படும் விருதுகளுக்கு விருதுநகர் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதில் முதல் பரிசு ரூ.1 லட்சம், 2 ஆம் பரிசு ரூ.60,000, 3 ஆம் பரிசு ரூ.40,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள்<> www.tnhorticulture.tn.gov.in<<>> இல் விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்பிக்கலாம்.

News October 10, 2024

பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி பெண் காயம்

image

சிவகாசி அருகே செவலூரில் கணேசன் என்பவருக்கு சொந்தமான சோனி பட்டாசு ஆலையில் இன்று சுமார் 200 பணியாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி, மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட வெடி விபத்தில் ரசாயண மூல பொருட்களை கையாண்ட காந்தியம்மாள் (73) என்ற பெண் தொழிலாளி பலத்த தீக்காயமடைந்தார். 100 சதவீத தீக்காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

News October 10, 2024

விருதுநகர் ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு

image

விருதுநகர் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 58 விற்பனையாளர் மற்றும் 13 பணியிடங்கள் விருதுநகர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன விற்பனையாளருக்கு பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான கல்வி, கட்டுநருக்கு 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் www.drbmadurai.net என்ற இணையத்தில் நவம்பர் 7ஆம் தேதி மாலை 5.40 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 10, 2024

கஞ்சா கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

image

வெம்பக்கோட்டை சிப்பிப்பாறை வழியாக ஏழாயிரம்பண்ணைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சிப்பிப்பாறை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது கார் மற்றும் பைக்கில் கடத்தி வரப்பட்ட 90 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கஞ்சா கடத்திய தினேஷ்குமார், கணேஷ்குமார், அய்யனார் ஆகிய 3 பேரை கைது செய்து கஞ்சா, கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!