India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மக்களே தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல்துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <

1.வணக்கம் விருதுநகர்’ ஹெல்ப்லைன் – 9791322979
2.கட்டுப்பாட்டு அறை – 1077
3.மின்சாரம் – 1912, 1800 425 19127
4.கந்துவட்டி கொடுமை – 9159443377
5.தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் – 04562-252130
6.தொழிலாளர் உதவி ஆணையர் செல்போன் – 9445398763, 9865254003
7.தொழிலாளர் துணை ஆய்வாளர் – 8939862505
8.முத்திரை ஆய்வாளர் – 9159443377
SHARE IT.

சிவகாசி அருகே பள்ளப்பட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி மாரியப்பன்(43). குடும்ப பிரச்னையால் மனமுடைந்து, கடம்பன்குளம் கண்மாய் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீக்காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே குல்லூர் சந்தையை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் கோகுல கண்ணன்(23) உள்ளிட்ட 3 பேர் இன்று பிப்.13 ஒரே பைக்கில் சொந்த வேலையாக அருப்புக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாலவநத்தம் அருகே எதிரே வந்த பைக் மீது இவர்கள் சென்ற பைக் நேருக்கு நேர் மோதி கோகுல கண்ணன் & மற்றொரு பைக்கில் வந்த அருள் முருகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியான தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா? தயங்கமா விருதுநகர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04562-252388 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.

அருப்புக்கோட்டை அருகே சின்னசெட்டிகுறிச்சியை சேர்ந்தவர் குருசாமி. இவர் நேற்று பிப்.12 மாலை பந்தல்குடியில் இருந்து தனது மகள் மற்றும் தனது பேரன் சஸ்வந்த்(3) ஆகியோரை அழைத்துக் கொண்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது சிதம்பராபுரம் சாலையில் அவ்வழியாக வந்த வேன் மோதி தாத்தாவுடன் சென்ற பேரன் சஸ்வந்த்(3) படுகாயம் அடைந்து உயிரிழந்தார். பந்தல்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

விருதுநகர் மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? <

விருதுநகர் மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <

சிவகாசி அருகே மாரனேரி போலீசார் காக்கிவாடன்பட்டி எஸ்.ஆர்.காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு தகர செட்டில் சட்ட விரோதமாக ஷாட் வகை பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மாரனேரி வரதகோபால்சாமிநகரை சேர்ந்த ரத்தினம் மகன் ஹேமத்ராஜன்(39) என்பவரை கைது செயதனர்.
Sorry, no posts matched your criteria.