India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நரிக்குடி அருகே துய்யனூர் கிராமத்தை சேர்ந்த லிங்கேசுவரன்(19) ஐ.டி.ஐ. மாணவர். பெட்ரோல் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றபோது, நரிக்குடியை சேர்ந்த அதுனான் ஓட்டி வந்த பவர் டிராக்டர் சமத்துவபுரம் அருகே மோதியது. படுகாயமடைந்த லிங்கேசுவரன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெற்றோர் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <

1. விருதுநகர் – 04562-243493
2. அருப்புக்கோட்டை – 04566-220219
3. சிவகாசி – 04562-224260
4. சாத்தூர் – 04563-260220
5. ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563-260209
6. இராஜபாளையம் – 04563-220500
7. வெம்பக்கோட்டை – 04562-284202
8. திருச்சுழி – 04566-282222
9. காரியாபட்டி – 04566-255570
10. வத்திராயிருப்பு – 04563-288529
இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3 கிலோவாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த செல்போன் <

சிவகாசி அருகே புதுக்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் அடித்து கொலை செய்த சம்பவத்தில் புதுக்கோட்டை சங்கர், ராஜேஷ்வரன், முத்துப்பாண்டி, மணிசங்கர், கொலையான ரமேஷின் மனைவி பிரியா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தன்னை பிரிந்து சங்கர் என்பவருடன் வாழ்ந்து வந்த தனது மனைவி பிரியாவை அழைக்க வந்த ரமேஷை சங்கர் நண்பர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <

விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே மானாவாரி பகுதிகளில் மழைக்காலத்தில் அதலைக்காய் செழிப்பாக வளர்ந்திருப்பதைக காணலாம். இதில் பல மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளின் குடற்புழுக்களை நீக்கம் செய்வதற்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். சமீப காலமாக இதன் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் பிற மாவட்ட மக்களும் இதனை சமையலுக்குப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஷேர் பண்ணுங்க

ஸ்ரீவி, கொத்தன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி பெருமாளம்மாள் கண்டித்துள்ளார். இதனால் அடிக்கடி செத்து விடுவேன் என்று சொல்லியுள்ளார். இந்நிலையில், பெருமாளம்மாள் மகளை விடுவதற்கு சென்றிருந்த நிலையில், மாரியப்பன் காட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வன்னியம்பட்டி போலீசார் பெருமாளம்மாளின் புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை ஜெய்ஹிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (46). ஆட்டோ ஓட்டுனரான இவரது மனைவி பிரியா (29) பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்து நிலையில் சிவகாசி அருகே புதுக்கோட்டையை சேர்ந்த லோடு வேன் டிரைவர் சங்கருடன் (27) பழக்கம் ஏற்பட்டு தனது கணவர் ரமேஷை பிரிந்து சங்கருடன் வாழ்ந்து வந்தார். இதையறிந்து மனைவி ப்ரியா, பிள்ளைகளை அழைத்து செல்ல வந்த ரமேஷை சங்கர் நண்பருடன் சேர்ந்து அடித்து கொலை செய்தார்.

விருதுநகர் மக்களே, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.