Virudunagar

News March 16, 2026

சிவகாசியில் பங்குனி பொங்கல் தேதி அறிவிப்பு

image

சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கல் விழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி பொங்கல் விழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற உள்ளது. இதில் ஏப்.5 அன்று பங்குனி பொங்கல் விழாவும், ஏப்.06 அன்று கயறுகுத்து நிகழ்வு, ஏப்.8அன்று தேரோட்ட விழாவும் நடைபெற உள்ளது.

News March 16, 2026

விருதுநகர்: தேர்தல் வந்தாச்சு-சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 16, 2026

விருதுநகரில் தேர்தல் புகார் அளிக்க எண் வெளியீடு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து விருதுநகர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்

News March 16, 2026

விருதுநகரில் தேர்தல் புகார் அளிக்க எண் வெளியீடு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து விருதுநகர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்

News March 16, 2026

விருதுநகரில் தேர்தல் புகார் அளிக்க எண் வெளியீடு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து விருதுநகர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும், விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் 1950 என்ற கட்டணமில்லா எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்

News March 16, 2026

விருதுநகரில் இன்று முதல் ரத்து – மாவட்ட நிர்வாகம்

image

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் விருதுநகர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்களும் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் வீண் அலைச்சலை தவிர்க்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News March 16, 2026

விருதுநகரில் லோக் அதாலத்தில் 527 வழக்குகள் தீர்வு

image

விருதுநகர் வட்ட சட்டம் பணிகள் ஆணைக்குழு சார்பாக நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி பாலமுருகன் தலைமையில் லோக் அதாலத் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 527 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.3, 90, 97,681 க்கு முதிர்வு தொகைகள் தீர்வானது. அதில் மோட்டார் வாகனத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.87 லட்சத்திற்கான உத்தரவு ஆணையை சார்பு நீதிபதி பாலமுருகன் வழங்கினார்.

News March 16, 2026

விருதுநகரில் லோக் அதாலத்தில் 527 வழக்குகள் தீர்வு

image

விருதுநகர் வட்ட சட்டம் பணிகள் ஆணைக்குழு சார்பாக நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிபதி பாலமுருகன் தலைமையில் லோக் அதாலத் வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 527 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.3, 90, 97,681 க்கு முதிர்வு தொகைகள் தீர்வானது. அதில் மோட்டார் வாகனத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.87 லட்சத்திற்கான உத்தரவு ஆணையை சார்பு நீதிபதி பாலமுருகன் வழங்கினார்.

News March 16, 2026

விருதுநகரில் 63 பறக்கும் படைகள் அமைப்பு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விருதுநகரில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 9 பறக்கும் படைகள் வீதம், மாவட்டம் முழுவதும் மொத்தம் 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு குழுவிற்கு 7 நபர்கள் வீதம் மொத்தம் 441 அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் வீதம் 63 நிலைக்கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அதில் 441 பேர் பணியாற்ற உள்ளனர்.

News March 16, 2026

விருதுநகரில் 63 பறக்கும் படைகள் அமைப்பு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விருதுநகரில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 9 பறக்கும் படைகள் வீதம், மாவட்டம் முழுவதும் மொத்தம் 63 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன. ஒரு குழுவிற்கு 7 நபர்கள் வீதம் மொத்தம் 441 அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 9 குழுக்கள் வீதம் 63 நிலைக்கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அதில் 441 பேர் பணியாற்ற உள்ளனர்.

error: Content is protected !!