Virudunagar

News September 4, 2025

விருதுநகரில் 108 ஆம்புலன்ஸ் வேலை அறிவிப்பு

image

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் செப்.6 அன்று காலை 108, 102 ஆம்புலன்ஸ், இலவச அமரர் ஊர்திகளுக்கு ஓட்டுநர், உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் ஓட்டுநருக்கு ரூ.21,120 ஊதியமும், உதவியாளருக்கு ரூ.21,320 ஊதியமும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 73977 24824, 9942328254 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE IT

News September 4, 2025

விருதுநகரில் 11 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது

image

▶️சிவகாசி விநாயகர் பள்ளி முதல்வர் முத்துக்குமார்
▶️க.மடத்துப்பட்டி ஜெயமேரி
▶️பாட்டகுளம் சிஎஸ்ஐ பள்ளி தலைமையாசிரியர் கிறிஸ்டி தங்கநாயகம்
▶️ராஜபாளையம் சுமதி
▶️சேதுபுரம் தலைமை ஆசிரியர் செல்லையா
▶️ராஜபாளையம் தொடக்கபள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி
▶️ஆவுடையாபுரம் பாலமுருகன்
▶️சங்கரலிங்கபுரம் ராமகிருஷ்ணன்
▶️வீரசோழன் தலைமை ஆசிரியர் ராஜாராம்
▶️வெள்ளையாபுரம் வேல்முருகன்
▶️மேலவரகுணராமபுரம் காசிவேல்

News September 4, 2025

அரசுப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மறவர் பெருங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இன்று (03.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடைபெற்று வருவதையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

News September 3, 2025

விருதுநகர்: 10th முடித்தால் விமான நிலைய வேலை ரெடி.!

image

இந்திய விமான நிலையங்களில் 1446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள் <>இந்த லிங்கை கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.09.2025 ஆகும். இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 3, 2025

சிவகாசியில் மட்டும் புதிய வசதி அறிமுகம்

image

சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் ரயில் பயணச் சீட்டுக்கான முன்பதிவு வசதிக்காக, தனி கவுன்டா் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், தத்கல் முன்பதிவுக்கான பயணச் சீட்டுகளையும் பெற்றுக்கொள்ளலாம். அஞ்சலக வேலை நாள்களில் இந்தச் சேவை கிடைக்கும். தென் மாவட்டங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில், சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது. எனவே, பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

News September 3, 2025

விருதுநகர்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா??

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவாக உள்ளது. இதை மாற்ற ஒரு வழி உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம், சொத்து இல்லாதவர்கள்<> இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பியுங்க.SHARE பண்ணுங்க..

News September 3, 2025

மாட்டுப் பண்ணையில் புகுந்த நாகப்பாம்பு உயிருடன் மீட்பு

image

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கம்பிக்குடி கிராமத்தில் ராக்கு
க/பெ. கோபாலன் என்பவரது மாட்டுப் பண்ணையில் நாகப்பாம்பு புகுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காரியாபட்டி தீயணைப்புத்துறை அதிகாரிகள் அந்தப் பாம்பை லாவகமாகப் பிடித்து அதை பத்திரமாக மீட்டு பின் காட்டுப் பகுதியில் கொண்டு போய் உயிருடன் விட்டனர்.

News September 2, 2025

தலைமை ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர்

image

விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இன்று (02.09.2025) பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமையாசிரியகளுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு (SLAS 2025) ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, தலைமையாசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

News September 2, 2025

ஶ்ரீவில்லிபுத்தூரில் குப்பை கிடங்கில் தீ

image

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் குப்பையை முழுமையாக தரம் பிரிக்காமல் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் கரும் புகை சூழ்ந்து சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலை மற்றும் ஶ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி சாலையில் புகை மூட்டம் சூழ்ந்து வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 2, 2025

விருதுநகரில் இனி Whatsapp மூலம் தீர்வு

image

விருதுநகர் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!