Virudunagar

News September 24, 2025

விருதுநகர்: 10 பவுன் தங்க சங்கிலி பறிப்பு!

image

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியை சேர்ந்த லலிதா (62), 3 நாட்களுக்கு முன்பு ரயில்வே ஸ்டேஷன் அருகில் வாக்கிங் சென்றார். அப்போது ஒரு நபர் அவரிடம் இருந்த 10 பவுன் தாலி செயினை பறித்து ஓடிவிட்டார். இதில் CCTV கேமிராக்களை ஆய்வு செய்த போலீசார், இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட செம்பட்டியை சேர்ந்த அடைக்கலம் (32) என்பவரை கைது செய்து 10 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.

News September 24, 2025

விருதுநகர்: அரசு மருத்துவமனையில் பிரச்சனையா.?

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் முறையாக தரப்படவில்லை என புகார் இருக்கிறதா? இனிமேல் நீங்க செல்லும் போது இது நடந்தால்?? தயங்கமால் விருதுநகர் மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 04562- 252388 அழைத்து தெரியப்படுத்துங்க. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும். இதை மற்றவர்களு\ம் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க. மறக்காம நீங்க SAVE பண்ணுங்க..

News September 24, 2025

விருதுநகர்: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

image

விருதுநகர் மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார்-ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ்அப்-கே வந்துடும். இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News September 24, 2025

விருதுநகர்: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.71,900 சம்பளம்!

image

விருதுநகர்: ஊரக வளர்ச்சி துறையில் உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10th படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் செப். 30க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.15,700 – ரூ.71,900 வரை. சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, வத்ராப், விருதுநகர், வெம்பக்கோட்டை, சிவகாசி, காரியாபட்டியில் பணிநியமனம் செய்யப்படும். SHARE IT

News September 24, 2025

விருதுநகர்: 2 விபத்துகள்., 2 பேர் பலி

image

கீழாண்மறைநாடு பகுதியில் டிராக்டரும், மோதிக்கொண்ட விபத்தில் டூவீலரில் வந்த மணிகண்டன் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீரசோழன் அருகே டூவீலரில் வந்த பார்த்திபன் உடன் லிப்ட் கேட்டு சித்ரா (31) என்பவர் வந்துள்ளார். அவ்வழியாக வந்த கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த சித்ரா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரு விபத்துகள் குறித்து அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 23, 2025

விருதுநகரில் 328000 பேருக்கு மகளிர் உரிமை தொகை

image

முதல்வர் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் இதுவரை 780 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 22000 மாணவர்களுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை, காலை உணவு திட்டத்தில் 72400 குழந்தைகள், மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 328000 பேர் பயனடைவதாக விருதுநகரில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News September 23, 2025

விருதுநகர்: இதுவரை 19 லட்சம் பட்டாக்கள் – உதயநிதி

image

விருதுநகரில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் ஒரு பக்கம் நிதியமைச்சர், மறுபக்கம் இடம் கொடுக்கும் அமைச்சர் இருப்பதால் விருதுநகர் பலமடங்கு வளர்ந்து நிற்கிறது.விருதுநகரில் இன்று 400 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 19 லட்சம் பட்டாக்களை அரசு வழங்கியுள்ளது என்றார்.

News September 23, 2025

நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்த துணை முதல்வர்

image

சாத்தூரில் இன்று தனியார் திருமண மஹாலில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்தார். பின்னர் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் முடிந்ததும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதில் வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்ஆர் ராமசந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

News September 23, 2025

அருப்புக்கோட்டையில் செயின் பறித்த நபர் கைது

image

பாளையம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி லலிதா(62). இவர் கடந்த சனிக்கிழமை ரயில் நிலையம் அருகே நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர் லலிதா கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார்.‌ இது குறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி செயின் பறிப்பில் ஈடுபட்ட செம்பட்டியை சேர்ந்த அடைக்கலம்(33) என்பவரை‌ நேற்று (செப்.22) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 23, 2025

சாத்தூர்: தொட்டு கூட பார்க்க முடியாது – உதயநிதி

image

சாத்தூரில் இன்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில், தமிழகத்தை எட்டி கூட பார்க்க முடியவில்லை என ஒன்றிய பாஜக அரசு ஏங்குகிறது. நாம் சண்டை போடாத ஆட்களே இல்லை. சண்டை போடும் அளவு தகுதியானவர்கள் இந்தியாவிலேயே இல்லை. 27 ஆண்டுகள் ஆனாலும் திமுக எழுச்சியோடு இருக்கும். திமுக வை தொட்டு கூட பார்க்க முடியாது என கூறினார்.

error: Content is protected !!