India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் அமைச்சர்களாக தங்கம் தென்னரசு, KKSSR ராமச்சந்திரன் மற்றும் இவர்களது குடும்பத்தினருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கை மறு விசாரணை நடத்த என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக அமைச்சர்கள் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 5-ம் திருநாளான இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 141 அங்கன்வாடி பணியாளர்கள், 115 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 4-ம் திருநாளான நேற்று இரவு ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ரெங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
விருதுநகர் அருகே பி.குமாரலிங்கபுரத்தை சேர்ந்த அமுதவள்ளி(39), மாரீஸ்வரி(39), இரவது மகள் முத்துமாரி(21), மீனாட்சி(14) உள்ளிட்டோர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மீசலூர் அருகே நடந்து சென்ற போது சரவணக்குமார்(25) என்பவர் ஓட்டிவந்த டூவிலர் இவர்கள் மீது மோதியது. இதில் 5 பேரும் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அமுதவள்ளி, சரவணன் ஆகியோர் உயிரிழந்தனர்.
திருச்சுழி பகுதியில் உள்ள பாண்டியர் காலத்துப் பூமிநாதர் கோயில், முன்னோர்களின் சாபம் தீர்க்கும் தலமாக நம்பப்படுகிறது. இதை மையப்படுத்தி திருச்சுழியை சுற்றி 8 இடங்களில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன. இங்குள்ள மூலவர் கல்யாண கோலத்தில் உள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு மோட்ச தீபம் ஏற்றினால் முன்னோர்கள் சாபம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. SHARE பண்ணுங்க.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான நாடக சாலை தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் சன்னதியில் பங்குனி மாத சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத திருவேங்கடமுடையான் சர்வ அலங்காரத்தில் எழுத்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகாசியில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் மற்றும் முக்கிய பஜார் வீதிகளில் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இந்நிலையில் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி வழிப்பறி கொள்ளையர்கள் உலாவர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தங்களது தங்க நகைகள் உள்ளிட்ட உடைமைகளை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
பிரதமரை துணிச்சலுடன் எதிர்த்து தமிழக உரிமைக்காக குரல் கொடுப்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஏழாயிரம்பண்ணையில் முதல்வர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜிஎஸ்டி என்ற பெயரில் ஒன்றிய அரசு தொழில் நடத்துபவர்களின் உழைப்பை சுரண்டுவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக (ஏப்.3) கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து 3-ஆம் திருநாளான நேற்று இரவு ஆண்டாள் தங்க பரங்கி நாற்காலியிலும், ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏப்ரல் 11ஆம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.