India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மானாவாரி பகுதிகளில் மழைக்காலத்தில் அதலைக்காய் செழிப்பாக வளர்ந்திருப்பதைக் காணலாம். இதில் பல மருத்துவக் குணங்கள் நிறைந்திருப்பதாக பாரம்பரிய மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகளின் குடற்புழுக்களை நீக்கம் செய்வதற்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். சமீப காலமாக இதன் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் பிற மாவட்ட மக்களும் இதனை சமையலுக்குப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஷேர்
தாட்கோ மூலமாக 10, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழகுடியின மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டியில் இளங்கலை அறிவியல் படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை மாத ஊதியமாக பெறலாம்.ஆர்வமுள்ளவர்கள் இங்கே<
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக மார்ச் 11 முதல் 14 வரை பக்தர்கள் மலையைறிச்சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பிரதோஷத்தை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை முதலே சாரல் மழை பெய்தாலே சதுரகிரி கோயில்களுக்கு குறைவான பக்தர்களை சென்றனர்.
சிவகாசியில் கடந்த ஒரே மாதத்தில் குடும்பத்தகராறில் 4 கொலைகள் நடந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பிப்.13 முருகன் காலனியில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன், பிப்.25 மாமியாரை குத்தி கொலை செய்த மருமகன், மார்ச்.5 மனைவியை எரித்து கொன்ற கணவன், மார்ச்.9 திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கருப்பசாமி வெட்டி கொலை. கொலை எதற்கும் தீர்வாகாது. வாழ்க்கை குறித்து 1 நிமிடம் யோசித்து முடிவெடுங்கள்.
வெம்பக்கோட்டை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் பொன்னுசாமி கடந்த 5ம் தேதி மனைவி முனிஸ்வரியை பெட்ரோல் ஊற்றி எரித்தார். அப்போது, பொன்னுசாமிக்கு தீக்காயம் ஏற்பட்டது. மனைவி தற்கொலை செய்து கொண்டதாக பொன்னுசாமி நாடகமாடியது போலீஸார் விசாரணையில், தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்; இந்நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொன்னுச்சாமி நேற்று உயிரிழந்தார்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் நாயுடு தெற்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர்(22). இவர் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி வீட்டில் அவ்வப்போது தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இவரது பாட்டி சரஸ்வதி போதையில் இருந்த ஸ்ரீதரை கண்டிக்கும் நோக்கில் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீதர் பாட்டியின் தலை நெத்தி என மூன்று இடங்களில் சரமாரியாக வெட்டி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான சிறப்பு சேர்க்கை முகாம் விருதுநகர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை(மார்ச்.11) நடைபெற உள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற 21 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்காலத்தில் 12 மாதங்களுக்கு உதவித்தொகையாக மாதத்திற்கு ரூ.5,000- வீதம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04562 -294755 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
விருதுநகர் புதிய பேருந்து நிலையம் சிறப்பாக செயல்படவும், வாகன விபத்துகளை தடுப்பதற்கும், போக்குவரத்து நெரிசலை குறைக்க பேருந்து வழித்தரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் விருதுநகர்-சிவகாசி சாலையில் மதுரை-சாத்தூர் நெடுஞ்சாலை சந்திப்புக்கும் ஆத்துப்பாலம் பேருந்து நிறுத்தத்திற்கும் இடையிலான பகுதியில் உடனடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே தாயில்பட்டி கலைஞர் காலனி சேர்ந்த பொன்னுச்சாமி (38), கடந்த 5ஆம் தேதியன்று மனைவி முனீஸ்வரியின் (28), நடத்தையில் சந்தேகப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார். அப்போது தீக்காயமடைந்த பொன்னுச்சாமி சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்களது 3 பெண் குழந்தைகளும் தற்போது நிற்கதியாய் தவிக்கின்றனர்.
அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிபதி செல்வன் ஜேசு ராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த ஜீவனாம்ச வழக்குகள் காசோலை வழக்குகள் என 250 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. அவற்றில் நிலுவையில் உள்ள 36 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இழப்பீடு தொகையாக ரூ 68,51,500 பெற்று தரப்பட்டதாக செய்தி குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.