Virudunagar

News September 23, 2024

சிவகாசி அருகே மருந்து வாங்க சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்

image

சிவகாசி அருகே சூர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மாரிசாமி 40. இவர் நேற்று மாலை சித்துராஜபுரத்தில் உள்ள மெடிக்கலுக்கு மருந்து வாங்க சென்று விட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து ஏற்படுத்திய துர்க்கை பாண்டி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

News September 22, 2024

விருதுநகரில் பட்டாசு விற்பனை வீழ்ச்சி

image

பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் தாமதமாவதால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதாக பட்டாசு உரிமையாளர்களும் வியாபாரிகளும் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளிக்கு இரு மாதங்களுக்கு முன்பே விருதுநகர் மாவட்டத்தில் 50 சதவீத பட்டாசுகள் விற்பனையாகி இருந்தநிலையில், தற்போது 10 சதவீத பட்டாசுகள் மட்டுமே விற்பனையாகி இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

News September 22, 2024

விருதுநகரில் பட்டாசு விற்பனை வீழ்ச்சி

image

பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் தாமதமாவதால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதாக பட்டாசு உரிமையாளர்களும் வியாபாரிகளும் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளிக்கு இரு மாதங்களுக்கு முன்பே விருதுநகர் மாவட்டத்தில் 50 சதவீத பட்டாசுகள் விற்பனையாகி இருந்தநிலையில், தற்போது 10 சதவீத பட்டாசுகள் மட்டுமே விற்பனையாகி இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

News September 22, 2024

விருதுநகரில் பட்டாசு விற்பனை வீழ்ச்சி

image

பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் தாமதமாவதால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளதாக பட்டாசு உரிமையாளர்களும் வியாபாரிகளும் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளிக்கு இரு மாதங்களுக்கு முன்பே விருதுநகர் மாவட்டத்தில் 50 சதவீத பட்டாசுகள் விற்பனையாகி இருந்தநிலையில், தற்போது 10 சதவீத பட்டாசுகள் மட்டுமே விற்பனையாகி இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

News September 22, 2024

கலசலிங்கம் ஆண்கள் அணி முதலிடம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2024 மாவட்ட‌ அளவில் கிரிக்கெட்போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்திருந்தனர். விருதுநகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் முக்கியமான அணிகள் போட்டியிட்டன.இதில் கலசலிங்கம் பல்கலைக்கழக கிரிக்கெட் ஆண்கள் அணி வீரர்கள் கலந்து கொண்டு முதலிடம் பெற்று, 45,000 ரூபாய் ரொக்கப்பரிசும் பெற்று சாதனை புரிந்தனர்.

News September 22, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் பதிவு செய்யும் வகையில் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் செப்.20 முதல் அக்.28ஆம் தேதி வரை காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.

News September 22, 2024

ஸ்மார்ட்டாக செயல்பட்டு கொலையை தடுத்த பெண் எஸ்ஐ

image

சிவகாசி,விஸ்வநத்தத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோபாலுக்கும், மற்றொரு ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் என்பவருடன் முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் தனது நண்பர் ஹரிஹரனுடன் சேர்ந்து ஆட்டோ ஓட்டுனர் கோபாலை ஆட்டோவில் கடத்தி சென்று வாளால் வெட்டியுள்ளனர். அப்போது ஆட்டோவில் இருந்து குதித்த கோபாலை அந்த வழியாக பைக்கில் சென்ற எஸ்ஐ செல்வி மீட்டு கொலை செய்ய முயன்ற இருவரையும் அதிரடியாக கைது செய்தார். SHARE IT

News September 22, 2024

விருதுநகரில் நிலம் தொடர்பான சிறப்பு குறைதீர் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணி முதல் 12:30 மணி வரை நிலம் தொடர்பான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த மாதத்திற்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் வரும் 24 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 22, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் மூலப்பொருள்களான சல்பர் பொட்டாசியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் பெர் குளோரைட் ஆகிய ரசாயன பொருட்களை விற்பனை செய்ய படைக்கலன் உரிமம் பெற்றுள்ள தொழிற்சாலைகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மேற்படி மூலப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News September 22, 2024

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1901 ஆக அதிகரிப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு மறு சீரமைப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 1893லிருந்து 1901 ஆக அதிகரித்துள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்தார்.

error: Content is protected !!