Virudunagar

News August 31, 2024

விருதுநகரில் வந்தே பாரத் நின்று செல்ல கோரிக்கை

image

இன்று முதல் சென்னையிலிருந்து காலை 5 மணிக்கு வந்தே பாரத் புறப்பட்டு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோயில் வழியாக சென்று திரும்பும் ஆனால் இந்த ரயிலுக்கு விருதுநகரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை.விருதுநகர், சிவகாசி மக்கள் பயன்பெறும் வகையில் விருதுநகரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News August 31, 2024

விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை – ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சிலை அமைப்பினர், நிர்வாகிகள் ஊர்வலம் அமைதியான முறை நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News August 30, 2024

திருச்சுழியில் 172 மதுபாட்டில்கள் பறிமுதல்

image

திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அத்தகவலின் பேரில் திருச்சுழி காவல் சார்பு ஆய்வாளர் வீரணன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் 172 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து அதில்11 பேரை கைது செய்துள்ளனர்.

News August 30, 2024

ஆலை உரிமையாளர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

image

விருதுநகர் அருகே காரிசேரி பகுதியில் செயல்பட்ட தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் மாரியப்பன், அருள்தாஸ், பிரபாகரன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கு விருதுநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஆலை உரிமையாளர்களான ராமர்(60), முத்துராமன்(58) ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

News August 30, 2024

விருதுநகரில் இன்று நாட்டு விதை கண்காட்சி

image

விருதுநகர் மாவட்டம் பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றம் சார்பாக இன்று (ஆக.30) விருதுநகர் கே.வி.எஸ். பள்ளியில் நாட்டு விதை கண்காட்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் காரியாபட்டி, பாம்பாட்டி மரபு விதை சேமிப்பு மைய நிறுவனர் சரவணகுமார், பூமி இயற்கை விவசாய மைய நிர்வாகி பூமிநாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர். விவசாயிகள் கண்காட்சியில் பங்கேற்று சிறப்பு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது.

News August 29, 2024

விருதுநகர் மாவட்டத்தில் 238 கடைகளுக்கு சீல்

image

விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை தொடர்பாக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதத்தில் 238 கடைகள் மற்றும் 23 வாகனங்களில் 1094 கிலோ 851 கிராம் எடையுடைய புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக 238 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.60 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News August 29, 2024

ராஜபாளையத்தில் தனியார் FM ரேடியோ

image

இந்தியா முழுவதும் 234 நகரங்களில் ரூ.784.87 கோடி மதிப்பில் உள்ளூர் பேச்சு மொழி, கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் தனியார் ரேடியோ அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் ராஜபாளையம் உட்பட தமிழ்நாட்டில் 11 நகரங்களில் FM ரேடியோ அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் உள்ளூரில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என மத்திய அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 29, 2024

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி

image

வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டுக்காக ஆக.31 முதல் செப்.3 வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் என  வனத்துறையினர் தெரிவித்தனர்.

News August 29, 2024

பொன் மாணிக்கவேல் முன் ஜாமீன் மனு விசாரணை

image

விருதுநகர் ஆலடிப்பட்டியில் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 6 பஞ்சலோக சிலைகளை விற்க முயன்றதாக சிலை கடத்தல் பிரிவு டிஎஸ்பி காதர் பாட்ஷாவை 2017ல் ஐஜி பொன்மாணிக்கவேல் கைது செய்தார்.சர்வதேச சிலை கடத்தல் கும்பலுக்கு உதவ தன்னை பழிகடாவாக்கியதாக பொன் மாணிக்கவேல் மீது சென்னை ஐகோர்ட்டில் காதர் பாட்ஷா தொடர்ந்த வழக்கில் சிபிஐ அவர் மீது வழக்கு பதிந்தனர். முன்ஜாமீன் கோரிய மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

News August 29, 2024

கேள்விக்குறியான பட்டாசு விற்பனை

image

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை வேகமெடுத்து வருகிறது. இந்த ஆண்டு கட்டப்பட்டுள்ள 200 புதிய பட்டாசு கடைகளுக்கான அனுமதி கோரி கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக வருவாய்த் துறையில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருவாய்த் துறையினர் புதிய பட்டாசு கடைகளுக்கான அனுமதி வழங்காமல் கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளதால் 200 பட்டாசு கடைகள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!