Virudunagar

News September 4, 2024

காவலர்கள் கட்டாயம் லத்தி வைத்திருக்க வேண்டும் – எஸ்பி 

image

அருப்புக்கோட்டையில் டிஎஸ்பி காயத்ரி நேற்று தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் பணியில் ஈடுபடும் போலீசார் கையில் கட்டாயம் லத்தி வைத்திருக்க வேண்டும்.  கையில் லத்தி இல்லாத காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். தலைக்கவசம் அணியாமல் காவலர்கள் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என வாக்கி டாக்கி வாயிலாக எஸ்பி கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

News September 4, 2024

பட்டாசு விபத்தில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

image

விருதுநகர் மாவட்டம் அச்சங்குளத்தில் 2021 அன்று  மாரியம்மாள் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு செப்.30 க்குள் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இழப்பீடு வழங்கவில்லை என்றால் தொடர்புடைய உயர் அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனக் கூறி வழக்கை செப்.30க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News September 4, 2024

மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

image

சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதலாமாண்டு மாணவர் இன்று காலை விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு நடத்திய விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் (29) என்பது தெரியவந்தது. போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News September 4, 2024

விருதுநகரில் 5 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

image

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி கல்விலை மற்றும் தொடக்க கல்வியை சேர்ந்த 9 ஆசிரியர்களுக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்க உள்ளது. ராஜசேகர், தண்டீஸ்வரர், ராஜ்குமார், பெருமாள், ஜெயா கிறிஸ்டிபாய், ஜோதிலட்சுமி, பால் ஆந்தோனி அமல் ராஜ், முருகன், டேனியல், சுப்புலட்சுமி ஆகியோர்க்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

News September 4, 2024

தப்பிய குற்றவாளி பள்ளத்தில் விழுந்து கை முறிவு

image

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நேற்று முன்தினம் பெருமாள்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளிக்குமார் என்பவரை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவத்தில் 4 பேரை கைது செய்த நிலையில் காளீஸ்வரனை விசாரணைக்காகவும், ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்த இடங்களுக்கு அழைத்துச் சென்ற போது போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்ததில் அருகில் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து கை உடைந்து முறிவு ஏற்பட்டதாக தகவல்.

News September 4, 2024

மூன்றாவது புத்தக திருவிழா ஆட்சியர் தகவல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகரில் வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 7 வரை மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கரிசல் மண்ணின் பண்பாட்டை மையமாகக் கொண்டு வண்ண சிறுகதைகள் எழுத்தார்வமிக்கவர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

இறைச்சி வைத்திருந்த 5 பேருக்கு தலா ரூ.20,000 அபராதம்

image

ஸ்ரீவி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மம்சாபுரம் ஒற்றன்குளம் கண்மாய் பகுதியில் இருந்த 5 பேரை சோதனை செய்த போது அவர்களிடம் காட்டுப்பன்றி இறைச்சி இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஸ்ரீவி வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து மம்சாபுரத்தை சேர்ந்த சுந்தர், பால்ராஜ், ஆனந்தகுமார் உள்ளிட்ட ஐந்து பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

News September 3, 2024

மூன்றாவது புத்தக திருவிழா ஆட்சியர் தகவல்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகரில் வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 7 வரை மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் மூன்றாவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கரிசல் மண்ணின் பண்பாட்டை மையமாகக் கொண்டு வண்ண சிறுகதைகள் எழுத்தார்வமிக்கவர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

டிஎஸ்பி தாக்குதல் குறித்து ஈபிஎஸ் கண்டனம்

image

அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது பெண் டிஎஸ்பி காயத்திரி மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.பெண் டிஎஸ்பி தலைமுடியை பிடித்து தாக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினருக்கே இங்கு பாதுகாப்பு இல்லாதா சூழல் உள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

அருப்புக்கோட்டை அருகே பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்

image

அருப்புக்கோட்டையில் டிரைவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி இன்று சிலர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி உள்ளிட்ட போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது பெண் டிஎஸ்பி தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதலில் ஈடுப்பட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

error: Content is protected !!