Virudunagar

News January 11, 2026

விருதுநகர்: 3 டி.எஸ்.பிக்கள் அதிரடி இடமாற்றம்!

image

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 டி.எஸ்.பி.க்களை (துணை காவல் கண்காணிப்பாளர்) இடமாற்றம் செய்து, DGP வெங்கட்ராமன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீவி, சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராஜா, நாகராஜன் மற்றும் குற்றப்பிரிவு DSP இளவரசன் ஆகியோர் வேறு இடத்திற்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2026

விருதுநகர்: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; பெண் கைது!

image

மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி.இவர் வீட்டருகே உள்ள தெரு மக்களுக்கு பொதுவான காலியிடத்தை தனது இடம் என்று முருகேஸ்வரி பிரச்னை செய்து வந்துள்ளார். பின்னர் அந்த இடத்தை சர்வேயர் வைத்து அளந்து வேலி அமைத்துள்ளனர்.அந்த இடத்தில் தேங்காய் மட்டையை முத்துலட்சுமி காய வைத்ததை முருகேஸ்வரி தூக்கி எறிந்து அருவாளால் வெட்டி காயப்படுத்தி உள்ளார்.மம்சாபுரம் போலீசார் முருகேஸ்வரியை கைது செய்தனர்.

News January 10, 2026

விருதுநகர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

image

விருதுநகர் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>CLICK <<>>செய்து மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவலுக்கு: 94987 94987 அழையுங்க. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 10, 2026

விருதுநகர்: பத்திரபதிவு கட்டணம் LIST!

image

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <>கிளிக் <<>>செய்து மாவட்டம், வட்டம், ஊரகம் (அ) நத்தமா, ஆண்டு தேர்ந்தெடுத்தா அதற்கு ஆகும் பத்திரபதிவு கட்டணம் தெரிஞ்சுக்கலாம்.. இதன் மூலமா இப்போ நீங்க வீடு (அ) நிலம் பத்திர பதிவு விலை தெரிஞ்சுக்கலாம்.பத்திரபதிவு கட்டணங்களை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 10, 2026

விருதுநகர்: வாலிபர் எரித்து கொலை.. காதலனின் நண்பர் கைது

image

விருதுநகர் ஆத்துமேடு சேர்ந்தவர் பொன்ராஜ் விக்னேஷ் 32. இவர் மனைவி பிரிந்து சென்றதால் பெற்றோருடன் உள்ளார். இவரும் APK ரோட்டை சேர்ந்த கிருஷ்ண சாமியும் 19, ஒன்றாக மது அருந்துவது வழக்கம். கிருஷ்ணசாமியின் காதலியுடன் பொன்ராஜ் விக்னேஷ் அடிக்கடி பேசி வந்ததால் ஜன.7 அன்று கிருஷ்ணசாமி, அன்புசெல்வம் சேர்ந்து கவுசிகா நதி பாலத்திற்கு அடியில் வைத்து கொன்று தீயிட்டு எரித்தனர்.தற்போது அன்புசெல்வத்தை கைது செய்தனர்.

News January 10, 2026

விருதுநகர்: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

விருதுநகர் மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து (ஜன.11) நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News January 10, 2026

விருதுநகர்: பேராசிரியை நகை மாயம்: மாணவரிடம் விசாரணை

image

திருச்சுழி அருகே வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியை நகைகள் மாயமான வழக்கில் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துராமலிங்கபுரம் வேளாண்மை கல்லூரியில் பணியாற்றும் மோகனப்பிரியா (34) தனது 8½ பவுன் தங்க நகைகளை கல்லூரி நூலகத்தில் காணாமல் போனது. சிசிடிவி ஆய்வில் மாணவர் ஹரிஹரன் (19) சென்றது தெரிய வந்ததை தொடர்ந்து ம. ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

சிவகாசி அருகே சாக்கு வியாபாரிக்கு நேர்ந்த சோகம்

image

சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுராஜ் (58). இவர் பழைய சாக்கு வியாபாரம் செய்து வரும் இவர் விஸ்வநத்தம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த முத்துக்காளை(30) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் முத்துக்காளை மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்

News January 10, 2026

விருதுநகர்: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

image

விருதுநகர் மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.

News January 10, 2026

விருதுநகர்: ராணுவ அதிகாரி வீட்டில் 14.5 பவுன் நகை திருட்டு.!

image

அருப்புக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்தவர் ஜெயபால், 41. இவர் ராணுவ அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். தன் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப் பட்டு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது 14.5 பவுன் நகை,வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிந்தது. அருப்புக்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!