India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகரில் சுமார் 599011 அரசி அட்டை தாரர்களுக்கு இன்று முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் உள்ள விலங்கியல் துறை சார்பில் பேராசியர்கள் மற்றும் மாணவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நாச்சியார்பட்டி கிராம விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு முறைகள், மண்புழு உரம் தயாரித்தல் குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்புழு உரம் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வண்ணம் விருதுநகரில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் நகராட்சி மற்றும் வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட அச்சகங்களில் காலண்டர் உற்பத்தி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கி இரவு, பகலாக விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் மூலம் சுமார் ரூ.400 கோடிக்கு உற்பத்தி நடந்து இருந்ததாக காலண்டர் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 2025ஆம் ஆண்டுக்கான தினசரி, மாத காலண்டர் தயாரிக்கும் பணிகள் கடந்த வாரம் விறுவிறுப்பாக நடைபெற்றன. *ஷேர்*

சிவகாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.அப்போது பள்ளப்பட்டி சாலையில் இயங்கி வரும் பாலிபேக் நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி மாநகராட்சி உரிமம் இல்லாமல் அந்த நிறுவனம் செயல்பட்டு வந்ததும் தெரியவந்ததால், அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர்.

தமிழ்நாட்டில் 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கம் செய்வதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சிவகாசி மாநகராட்சி எல்லை விரிவாக்கத்திற்காக ஆனையூர், சித்துராஜபுரம், நாரணாபுரம், விஸ்வநாதம், பள்ளப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம், அனுப்பன்குளம், சாமிநத்தம், தேவர்குளம் ஆகிய 9 கிராம ஊராட்சிகள் சிவகாசி மாநகராட்சியுடன் இனிய உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீவி.ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.2 ஆம் நாளான இன்று ஆண்டாள் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வடபத்ரசாயி சந்நிதி முன் உள்ள கோபால விலாசம் என்னும் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார்ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் மற்றும் பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தைத்திங்கள் தமிழர் மாதத்தையொட்டி தமிழ், தமிழர், தமிழ்நாடு – பண்பாடும் பெருமைகளும் என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளது. அருப்புக்கோட்டை அல் அமீன் பள்ளி, சிவகாசி எஸ்.ஹெச்.என்.வி மெட்ரிக் பள்ளியில் ஜன.4 அன்று காலை 10 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு 93616 13548, 86675 73086 இல் தொடர்பு கொள்ளலாம்.

சாத்தூர் அருகே கொம் மங்கியாபுரத்தைச் சேர்ந்தவர் முதல் பட்டதாரி ரேணுகா. 2 பெண் குழந்தைகளுக்கு தாயான இவர் தமிழ்நாடு காவல்துறையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இக்கிராமத்தில் இருந்து முதல் பெண் காவலர் என்ற பெருமையுடன் விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் ஜீப் ஓட்டும் ஒரே பெண் டிரைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நம்ம ஊர் பெண்ணுக்கு வாழ்த்துக்களை CONNENT இல் தெரிவிக்கலாம்.

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று ஆண்டாள், ரங்கமன்னருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து ஆண்டாள்,ரங்கமன்னார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.