India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி சர்ச் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(26) என்ற இளைஞரை இன்று ஊரணித் தெரு தனியார் தோப்பு பகுதியில் வைத்து மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது குறித்து தகவலறிந்த கூமாபட்டி போலீசார் பிரேதத்தை மீட்டு உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சம்யுக்தா என்ற 5 வயது குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்கம்பத்தில் இருந்து மின்கசிவு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் ஏற்கனவே பல முறை புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 450 கிராம ஊராட்சிகளில் அக்டோபர். 2 அன்று கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், ஊராட்சி தணிக்கை அறிக்கை, தூய்மை குடிநீர் வினியோகம், ஜல்ஜீவன் இயக்கம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் 1 மாநகராட்சி 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களில் 450 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பெரும் அச்சுறுத்தலாக நாய் தொல்லை உள்ளது. இதில் கடந்த 2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மட்டும் 7246 பேருக்கு நாய் கடியால் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 17ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தென் இந்திய தங்க காசு என அழைக்கப்படும் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் 6 இதழ் கொண்ட பூ வடிவமும், மற்றொரு பக்கத்தில் புள்ளிகள் மற்றும் கோடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் வருகிற 30-ந்தேதி பிரதோஷம், 2-ந்தேதி அமாவாசை அன்று சுந்தர மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது. சதுரகிரி கோவிலுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அறிவித்துள்ளனர் சிறப்பு பேருந்து வசதி உள்ளது. பகத்தர்கள் ஓடையில் குளிக்கவும், மது, போதைபொருட்கள் பாலித்தீன் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு தடை விதித்துள்ளது
விருதுநகர் மாவட்டத்தில் டிரான்ஸ்ட்போர்ட் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவைகளில் சட்டவிரோதமாக பட்டாசுகள், வெடிபொருள்கள், வெடிபொருள் சட்ட விதிகளுக்கு முரணாக பதுக்கி வைக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து காவல்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொண்ணாங்கன்னி கிராமத்தில் உள்ள வெங்கடேஷ்குமாருக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்க பயன்படும் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இதணையடுத்து அப்பகுதியில் சாலையோரம் உள்ள காய்ந்த செடி கொடிகளுக்கு யாரோ தீ வைத்துள்ளனர்.அந்த தீ அருகே உள்ள கரும்புத் தோட்டத்திலும் பரவியதில்,அறுவடைக்கு தயாராக இருந்த 4 ஏக்கர் கரும்பு தீயில் கருகி வீணானது.
சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் பெண்களுக்கு நிகழும் பாலியல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிப்பது, அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலஅலுவலர் கெங்கா விஜயராகவன் கலந்துகொண்டு பெண்களுக்கு நிகழும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு தீர்வாக அமையும் சட்ட நுணுக்கங்களை எடுத்துறைத்தார்.
துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நாளை காலை பதவியேற்க உள்ளார். மனோ தங்கராஜ்,செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட 6 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள்ளது. அதன்படி நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசிற்கு சுற்றுச்சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.