Virudunagar

News October 5, 2024

முகமூடி கொள்ளையனிடமிருந்து 47 பவுன் நகைகள் மீட்பு

image

தென்மாவட்டங்களில் ரயில்வே ட்ராக்கை ஒட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு மங்கி குல்லா,பாறையைப் பிளக்கும் இரும்பு ராடு போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி கொத்தனார் மூர்த்தி டீம் நகை, பணத்தை கொள்ளையடித்து வந்தனர்.இக்கும்பலின் தலைவன் மூர்த்தியை சமீப நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரித்த போலீசார் ஸ்ரீவியில் கொள்ளையடித்த 47 பவுன் நகைகளை மீட்டு மீண்டும் சிறையில் அடைத்தனர்.

News October 5, 2024

பட்டம் புதூர்: பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

image

புராட்டாசி 3வது சனிக்கிழமையை முன்னிட்டு விருதுநகர் அடுத்த பட்டம் புதூர் கிராமத்தில் உள்ள வீரராக பெருமாள் கோவிலில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்து சென்றனர். மேலும் கிராமத்தினர் சார்பாக 2000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

News October 5, 2024

சட்டவிரோத பட்டாசுகள் பறிமுதல்

image

விருதுநகர் அருகே அக்ரஹாரப்பட்டி பாலம் அருகில் உள்ள தனியார் பட்டாசு கடை பின்புறம் நேற்று வச்சகாரப்பட்டி காவல் துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக பட்டாசுகள் பேக்கிங் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பட்டாசுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஜெயராஜ்(53) என்பவர் கைது செய்தனர்.

News October 5, 2024

விருதுநகர்: கிராம சபை கூட்டத்தில் முறைகேடு

image

சிவகாசி அருகே வெள்ளூர் கிராமத்தில் கடந்த 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்துள்ளது இதில் 50-க்கும் குறைவான பொதுமக்கள் மட்டுமே கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் ஆண்கள் 102 பேரும், பெண்கள் 103 பேரும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டதாக பொய்யான தகவலை ஊராட்சி ஆன்லைன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

News October 5, 2024

புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருநாளான புரட்டாசி பிரம்மோற்சவ விழா நேற்று (அக்.4) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின் கொடிப் பட்டம் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, கருடக் கொடியேற்றம் நடைபெற்றது.

News October 4, 2024

அழகழகான கொலு.. அசத்தலான பொம்மைகள்

image

சாத்தூர் அடுத்த மேட்டமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ண சாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரில் நவராத்திரியை முன்னிட்டு இன்று (அக்.04) வித விதமான கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும் நவராத்திரி முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.

News October 4, 2024

விருதுநகரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் நாளை (அக்.5) மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.20க்கும் மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலை நாடுபவர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 4, 2024

சிவகாசி அருகே மகனை கொலை செய்த தந்தை உயிரிழப்பு

image

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் ஓய்வு பெற்ற வேளாண் துறை ஊழியரான ராமசாமி(74), மது போதையில் தொடர் தொந்தரவு செய்து வந்த தனது மகன் சுப்ரமணியை அக்.1ம் தேதி கொலை செய்தார். இதை தொடர்ந்து கைதான ராமசாமி வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(அக்.04) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News October 4, 2024

ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அழகில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் அக்.22 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 4, 2024

ஆண்டாள் கோயிலில் சேனை முதல்வர் வீதி உலா

image

ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா இன்று (அக்.4) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதற்காக நேற்று சேனை முதல்வர் வீதி உலா நடைபெற்றது. 9 ஆம் தேதி ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 10 ஆம் தேதி சயன சேவையும், 9 ஆம் நாளான 12 ஆம் தேதி பெரிய பெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தில் செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது.

error: Content is protected !!