Virudunagar

News January 14, 2026

விருதுநகர்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

விருதுநகர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1<>. இங்கு க்ளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!

News January 14, 2026

சாத்தூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிருப்தி

image

சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அரசு அறிவித்த ரூ.3000 ரொக்கம், சீனி, அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பொங்கலுக்கு வேஷ்டி, சேலை வழங்கப்படவில்லை. இது குறித்து ஊழியர்களிடம் கேட்ட போது சேலை, வேஷ்டி வந்தவுடன் கூறும் நிலையில் பொங்கலுக்கு வழங்காமால் தாமதமாக வழங்குவதால் கிராம மக்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.

News January 14, 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மூதாட்டியை சோதனை செய்தபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிச்சையம்மாள் (60) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News January 14, 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற மூதாட்டி கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மூதாட்டியை சோதனை செய்தபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிச்சையம்மாள் (60) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News January 14, 2026

விருதுநகர் துணை கமிஷனர் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் துணை போக்குவரத்து கமிஷனர் வெங்கட்டரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து பயணிகள் 90257 23800 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் தகவல், தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கும் வரும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News January 14, 2026

விருதுநகர் துணை கமிஷனர் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் துணை போக்குவரத்து கமிஷனர் வெங்கட்டரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து பயணிகள் 90257 23800 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் தகவல், தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கும் வரும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News January 14, 2026

சாத்தூர் அருகே விபத்தில் ஒருவர் பலி

image

சாத்தூர் வெள்ளையப்பர் தெருவை சேர்ந்தவர் முனியசாமி(62). இவர் சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பாக சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 13, 2026

விருதுநகர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News January 13, 2026

விருதுநகர்: உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News January 13, 2026

விருதுநகர் நரேந்திரக்குமாருக்கு விருது அறிவித்த அரசு

image

மரபுத் தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத் தமிழ் வகைபாட்டில் 2025-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகளை சற்று முன் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் விருதுநகரை சேர்ந்த இரா.நரேந்திரக்குமாருக்கு(74) படைப்புத் தமிழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு விருதுத் தொகையாக ரூ. 5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜன. 16 அன்று வழங்க உள்ளார்.

error: Content is protected !!