India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகரில் அரசு பல் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என 2009-ல் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன் பின் ஜெயலலிதா முதல்வரான பின் தென்மாவட்டங்களில் பல் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார். அவரது மறைவிற்கு பின் முதல்வரான பழனிச்சாமி இதற்காக முதல்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்தார். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் இதுவரை பணி துவங்கவில்லை.

ஸ்ரீவியில் நீதிமன்றத்தில் ஏலம் விடப்படும் வாகனங்களை குறைந்த விலைக்கு எடுத்துத் தருவதாகக் கூறி,கட்டட ஒப்பந்ததாரர் ராமசாமியிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக முருகேசகண்ணன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பணத்தை திரும்ப கேட்டபோது வழங்கப்பட்ட காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பிவிட்டதால், ராமசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

விருதுநகர் மாவட்ட ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கு SHARE செய்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்க

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <

அருப்புக்கோட்டை ஸ்ரீசௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நேற்று பொங்கல் கொண்டாட்டத்தை முடித்து கல்லூரி முன்பு இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று பொது மக்களை அச்சுறுத்தினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று டவுன் போலீசார் அந்த மாணவர்களை அழைத்து தக்க அறிவுரை வழங்கி இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து தலா ரூ.11,000 அபராதம் விதித்தனர்.

அருப்புக்கோட்டை அருகே கல்குறிச்சி பகுதியில் தி.மு.க. தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு இன்னும் சரியான தேதி குறிப்பிடாத நிலையில் நாளை(ஜன.16) பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். பின்னர் இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஏற்பாடுகளை காலை 11 மணியளவில் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருப்புக்கோட்டை அருகே பாப்பாகுடியை சேர்ந்தவர் சரவணபாலன்(35). இவர் நேற்று(ஜன.14) பைக்கில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது கஞ்சநாயக்கன்பட்டி விலக்கில் சாலை நடுவே உள்ள பேரிகார்டில் பைக் மோதி சரவணபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்; கூடுதல் விவரங்களுக்கு <

மத்திய அரசின் NPS வாத்சல்யா திட்டத்தில் மாதம் ₹1,000 சேமித்தால், உங்கள் குழந்தைகளுக்கு 18 வயதில் சுமார் ₹5.5 லட்சமும், 60 வயதில் ₹2.75 கோடி வரையும் கிடைக்கும். கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்காக இடையில் பணம் எடுக்கும் வசதி உண்டு. உங்கள் குழந்தைளை எதிர்கால கோடீஸ்வரராக மாற்ற இன்றே இணையுங்கள்; கூடுதல் விவரங்களுக்கு <

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள எலுமிச்சங்காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுராமலிங்கம் (85). இவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே பொங்கல் பண்டிகைக்கு காப்பு கட்டும் செடிகளை பிடுங்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். இதகவ்ல் அறிந்து சென்ற ஏழாயிரம்பண்ணை தீயணைப்புத் துறையினர் முதியவரின் சடலத்தை மீட்டனர்.
Sorry, no posts matched your criteria.