Virudunagar

News January 17, 2026

விருதுநகர்: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இங்கே கிளிக் <<>>செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 17, 2026

ஸ்ரீவி.யில் விஷம் குடித்து இளைஞர் தற்கொலை

image

ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சமரசர்தார் (26) என்பவர் தனியார் மில்லில் பார்த்து வந்துள்ளார். பெற்றோர் இல்லாத இவர், மதுவுக்கு அடிமையாகி மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜன.12ல் விஷம் குடித்த இவரை அங்குள்ளவர்கள் மீட்டு விருதுநகர் G.H-ல் சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 17, 2026

விருதுநகர்: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

image

விருதுநகர் மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ibpsreg.ibps.in/nabhindec25/ – என்ற தளத்தில் பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News January 17, 2026

விருதுநகர்: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

image

சாத்தூர் பகுதியை சேர்ந்த ராஜவேல்முருகன் என்பவரது மகன் பத்மேஷ் (12). இவர் 7-ம் வகுப்பு படித்து வந்தார். பத்மேஷ் மற்றும் தம்பி இருவரும் சைக்கிளில் விளையாடியபோது தம்பி கீழே விழுந்துள்ளார். இதனால் ராஜவேல்முருகன், பத்மேஷை திட்டியதாக தெரிகிறது. இதனை அடுத்து, பத்மேஷ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 16, 2026

விருதுநகர்: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 16, 2026

விருதுநகர்: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு..!

image

அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 16, 2026

JUST IN விருதுநகர்: மீண்டும் பரபரப்பை கிளப்பிய எம்.பி

image

கூட்டணி ஆட்சியில் வளமிக்க துறைகளை காங்கிரஸ் நாடியதில்லை என விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு தேவை என தொடர்ந்து வலியுறுத்தும் மாணிக்கம் தாகூர் மகாராஷ்டிரா, கேரளா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மக்களை மையமாக கொண்ட சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி, பெண்கள் குழந்தைகள் நலன் துறைகளை காங்கிரஸ் பொறுப்புடன் ஏற்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.

News January 16, 2026

விருதுநகர் நரேந்திரக்குமாருக்கு விருது வழங்கிய முதல்வர்

image

மரபுத் தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத் தமிழ் வகைபாட்டில் 2025-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகளை தமிழக அரசு வெளியிட்டது. அதில் விருதுநகரை சேர்ந்த இரா.நரேந்திரக்குமாருக்கு(74) படைப்புத் தமிழ் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இவருக்கு விருது, விருது தொகையாக ரூ. 5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கத்தை வழங்கினார்

News January 16, 2026

விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY NOW!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. <>இங்கு கிளிக்<<>> செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 16, 2026

விருதுநகர்: பட்டாசு தொழிலாளி மீது பாய்ந்த போக்சோ

image

ஏழாயிரம்பண்ணை அருகே மார்க்கநாதபுரத்தை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன், (20). பட்டாசு ஆலை தொழிலாளியான இவருடன் பணிபுரிந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். சிறுமி கர்ப்பமான நிலையில் இதுகுறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை ஊரக நல அலுவலர் மகாலட்சுமி புகாரில் பாண்டீஸ்வரன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!