Virudunagar

News January 19, 2026

விருதுநகரில் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை

image

விருதுநகர், நரிக்குடி அருகே குறையறைவாசித்தான் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் சிறுநீரக பாதிப்பால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது நிலையை எண்ணி விரக்தி அடைந்து சில நாட்களுக்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இந்த நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை.

News January 18, 2026

விருதுநகர்: Spam Calls-க்கு இனி ‘எண்டு கார்டு’!

image

விருதுநகர் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 18, 2026

விருதுநகர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

விருதுநகர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News January 18, 2026

விருதுநகர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

விருதுநகர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

News January 18, 2026

விருதுநகர்: மீண்டும் திமுகவை விமர்சித்த மாணிக்கம் தாகூர்

image

திமுக கூட்டணியில் இருந்து காங்.,-ஐ வெளியேற்ற போட்ட திட்டம் தோல்வியில் முடிந்ததால், மாணிக்கம் தாக்கூர், பிரவீன் சக்ரவர்த்தி கட்சியில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது. இதையடுத்து தனது X தள பக்கத்தில் திமுக ஐடி விங்கை எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். அதில் அல்றசில்ற ITwing கனவு பலிக்காது கண்ணா. நான் உண்மையான காங்கிரஸ்காரன் என பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 18, 2026

சாத்தூர்: ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை

image

சிவகாசி பள்ளப்பட்டி சாலையை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(23). கூலி வேலை செய்து வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை இவரது பாட்டி கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் ராஜா சாத்தூர் ரயில் நிலையம் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 18, 2026

சாத்தூர்: ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை

image

சிவகாசி பள்ளப்பட்டி சாலையை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(23). கூலி வேலை செய்து வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை இவரது பாட்டி கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் ராஜா சாத்தூர் ரயில் நிலையம் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 18, 2026

விருதுநகர்: 10th போதும்., மத்திய அரசு வேலை ரெடி!

image

விருதுநகர் மக்களே தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) காலியாக உள்ள 173 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18-50 வயதுக்குட்பட்ட 10th, 12th, ITI, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 30க்குள் இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கவும். இதற்கு சம்பளம் ரூ.19,900 – ரு.78,800 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். SHARE IT.

News January 18, 2026

சாத்தூர்: சப்-சன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

image

சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் அருண்குமார். கடந்த மாதம் வீட்டில் உள்ள அறையில் தூக்கில் இவரது மனைவி இளவரசியின் உடல் மீட்கப்பட்டது. இளவரசியின் பெற்றோர் தங்களது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் டிஐஜி அபிநவ்குமார் சப்-சன்ஸ்பெக்டர் அருண்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

News January 18, 2026

ராணுவ படை வீரர்களின் குடும்பத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/அவரைச்சார்ந்தோர்கள் மற்றும் தற்பொழுது இராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.01.2026 அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற உள்ளது என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!