Virudunagar

News October 13, 2024

விருதுநகர் மாவட்டதில் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விருதுநகர், சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை சுற்றுவட்டாரங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. வருகின்ற தீபாவளி கொண்டாட்டத்துக்காக சிவகாசியில் சுமார் 1,000 பட்டாசு ஆலைகள் பட்டாசு உற்பத்தி செய்து வந்த நிலையில், தற்போது பெய்யும் மழையினால் உற்பத்தி வெகுவாக குறைந்ததாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

News October 13, 2024

கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து தற்கொலை

image

சிவகாசி காமராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரி (45). கணவரைப் பிரிந்து தனது மகளுடன் வசித்து வந்த இவர் கடன் தொல்லையால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (அக்.12) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News October 12, 2024

விருதுநகர்: மின்னல் தாக்கி பட்டாசு குடோனில் வெடி விபத்து

image

சிவகாசி விளாம்பட்டி சாலையில் ஒத்த புலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு குடோனில் இன்று(அக்.12) பயங்கர வடிவத்தை ஏற்பட்டது. இடியுடன் கூடிய கனமழை பெய்த போது குடோனில் இடி மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட வெடி விபத்தால் சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு தீப்பிலம்பு தென்பட்டது. சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

News October 12, 2024

விருதுநகரில் ரூ.2000 கோடியில் ஜவுளி பூங்கா

image

விருதுநகர், சாத்தூர் அருகே சுமார் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் டெக்ஸ்டைல் ஜவுளி பூங்கா அமைய உள்ளது. டெக்ஸ்டைல் பூங்கா முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும்போது ரூ.2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் விருதுநகரில் வேலை தேடிவரும் படித்த பட்டதாரி இளைஞர்கள் & பெண்களுக்கு அதிக அளவில் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News October 12, 2024

விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று கனமழை

image

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (அக்.12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.

News October 12, 2024

ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையில் 28 பேர் நீக்கம்

image

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள அரசு சிமெண்ட் ஆலையில் 28 தற்காலிக பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிமெண்ட் ஆலை புனரமைக்கப்படாமல் உற்பத்தி படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில், தற்போது 28 தற்காலிக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News October 11, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் 2024 அக்டோபர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் அக்டோபர் 18 அன்று காலை 11 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்தார்.

News October 11, 2024

சாத்தூர் பெண்ணிடம் சினிமா பட பாணியில் மோசடி

image

சாத்தூரை சேர்ந்தவர் சிங்கராணி 39. இவரிடம் மதுரையை சேர்ந்த அருண், முருகன் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் தருவதாக ரூ.7.50 லட்சம் பெற்றுள்ளனர். பணத்தை பெற்ற அருண் ஆயில் நிரப்பிய பிளாஸ்டிக் கேனை சிங்கராணியிடம் கொடுத்து இந்த கருப்பு நிற ஆயிலை ஊற்றினால் ரூபாய் நோட்டாக மாறும் என நம்ப வைத்தனர். வீட்டில் சென்று சோதித்த போது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை.

News October 11, 2024

வானிலை எச்சரிக்கைகளை முன் கூட்டியே அறிய வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவமழை 2024 வானிலை முன்னெச்சரிக்கைகளை மக்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள தமிழக அரசால் டிஎன் அலார்ட் என்ற கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியின் மூலம் மக்கள் அனைவரும் வெப்பநிலை, மழை போன்ற வானிலை அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

News October 11, 2024

214 பட்டாசு பெட்டிகள் பறிமுதல்

image

சிவகாசி அருகே மீனம்பட்டி ரத்தினபுரிநகர் பகுதியில் கிழக்கு போலீஸ் காவல் நிலைய எஸ்.ஐ ஆனந்தகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள குடோனில் உரிய அனுமதியின்றி 214 பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அந்த பெட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் சித்துராஜபுரத்தை சேர்ந்த அறிவுசெல்வம் (67) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!