India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் அருகே இ சொக்கலிங்கபுரத்தில் நேற்று மதியம் அங்குள்ள கருவேலம் காட்டுப்பகுதியில் எலும்புக் கூடு கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் வச்சகாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல் துறையினர் விசாரணையில் அவர் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ராமன் என்பது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் முத்துலட்சுமி இவர் புரட்டாசி 3வது சனிக்கிழமை அன்று கோயிலுக்கு சென்று விட்டு 11 பவுன் எடை கொண்ட தங்க நகையை பீரோவில் வைத்துள்ளார்.பின் பொங்கலுக்கு பார்த்தபோது நகை காணவில்லை.போலீசில் புகார் செய்ததில் நகையை அடகு வைத்து விலை உயர்ந்த பைக் வாங்கியுள்ளார் பக்கத்து வீட்டை சேர்ந்த காளிராஜ். இதற்க்கு அவர் தாய் பத்மாவதி, சித்தி ஆனந்தவள்ளி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

மம்சாபுரம் வாலாங்குளம் கண்வாய் பகுதியில் சார்பு ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மம்சாபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ்(22) என்பவரை சோதனை செய்தபோது, கைப்பையில் கொய்யாப்பழங்கள் மற்றும் 4 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது. விசாரணையில் காட்டுப் பன்றிகளைவேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு வந்தது தெரிந்தது. இதை அடுத்து பொன்ராஜ் போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி அருகே சன்னாசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் 42. ஓட்டுநர் வேலை பார்த்து வந்த இவருக்கு சில மாதங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகி தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் முத்துக்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

தமிழ் வளர்ச்சிதுறை மூலம் ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக கவிதை, கட்டுரை, பேச்சுபோட்டி நடைபெறும். 2024-25 ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் ஜன.21, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் ஜன.22 அன்று விருதுநகர் பழைய ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ளும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், முதல்வர் ஒப்புதலுடன் விண்ணப்பங்களை tamilvalar.vnr@tn.gov.in மின்னஞ்சலுக்கு ஜன.20 க்குள் அனுப்ப வேண்டும்.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 6.15 மணிக்கு நிறைவடைந்தது. இதில் சிறந்த காளைக்கான முதல் பரிசான டிராக்டர் சேலத்தினை சேர்ந்த பாகுபலி காளைக்கு வழங்கப்பட்டது.
2ம் பரிசான பைக் எரசக்கநாயக்கனூரை சேர்ந்த வக்கீல் பார்த்தசாரதி என்பவரின் காளைக்கு வழங்கப்பட்டது. 3ம் பரிசாக விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவரின் காளைக்கு சிறந்த காளைக்கான எலக்ட்ரிக் பைக் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 22.01.2025 முதல் 01.02.2025 வரை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரை நடைபெற உள்ளது. இதில் வேளாண் தொழில்நுட்ப விளக்கக் காட்சிகள், நவீன விவசாய தொழில்நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. இதில் அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என ஆட்சியர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

விருதுநகரில் மாவட்ட கண்காணிப்பு அலகில் பணிபுரிய இளம் தொழில்முறை வல்லுநர் (Young Professional) பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மாதம் ஊதியமாக ரூ.50,000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://virudhunagar.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். *ஷேர்

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் 1 பணியிடமும்(மாத ஊதியம் ரூ.27804) , சிறப்பு சிறார் காவல் பிரிவில் சமூகப்பணியாளர்கள் 2 பணியிடங்களும்(மாத ஊதியம் ரூ.18536) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.virudhunagar.nic.in லிருந்து விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து ஜன.27 க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்ப வேண்டும். *ஷேர்*

தாட்கோ மூலமாக 12 ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. பயிற்சி முடிந்த பிறகு ரூ.20,000 முதல் ரூ.22,000 வரை ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக வேலை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் www.tahdco.com மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.