Virudunagar

News September 19, 2024

பசுமை தீர்ப்பாயத்தை அணுகி நிவாரணம் பெற ஐகோர்ட் உத்தரவு

image

2021 இல் ஏழாயிரம்பண்ணை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.20 லட்சம் வழங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த கோரிய வழக்கில் மனுதாரர் தேசிய பசுமை தீர்பாயத்தை அணுகி நிவாரணம் பெற மதுரை ஐகோர்ட் உதரவிட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத, அதிகாரிகளுக்கு சிறை தண்டனையும் ரூ.10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க அதிகாரம் உள்ளது.

News September 19, 2024

அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நேற்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 38 மாவட்ட அரசு துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். அதனைத் தொடர்ந்து காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

News September 18, 2024

3 குழந்தைகளுக்கு உணவில் விஷம் கொடுத்த தாய்

image

விருதுநகர் ரோசல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு வினோத்குமார், நித்தியா, திவ்யா ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே இன்று கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனை அடைந்த கலையரசி தனது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது 4 பேரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

News September 18, 2024

ரயில் பயணிகளின் கவனத்திற்கு

image

மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை (செப்.19) முதல் அக்.7 வரை (செப். 25, அக். 2 தவிர) செங்கோட்டையிலிருந்து காலை 7.05 மணிக்குப் புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில் கள்ளிக்குடி, மதுரை, கொடைரோடு, திண்டுக்கல் வழியே செல்வதற்கு பதிலாக, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 18, 2024

அமைச்சர்கள் வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

image

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு மறு விசாரணையில் சிறப்பு வழக்கறிஞர்களை அரசு தரப்பில் நியமிக்க கூறிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞர் எந்த அரசியல் சார்பும் இல்லாமல் செயல்பட வேண்டும் என சென்னையை சேர்ந்த செந்தில்குமார் தாக்கல் செய்த மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News September 18, 2024

அருப்புக்கோட்டையில் அதிகாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

அருப்புக்கோட்டை புறவழிச்சாலை சாய்பாபா கோவில் அருகே இன்று டூ வீலர் விபத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று பார்த்ததில் உயிரிழந்த இளைஞர் அன்பு நகரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அந்த இளைஞர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாரா இல்லை பைக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி இறந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 18, 2024

காரியாபட்டி பகுதிகளில் கலெக்டர் இன்று ஆய்வு

image

விருதுநகர் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் அதிரடியாக ஆய்வு மேற்கொள்ள இன்று காலை 9 மணிக்கு ஆரம்பிக்கிற ஆய்வுப்பணி நாளை காலை 9 மணி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுக்களாக கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 18, 2024

காளையார்குறிச்சியில் மீன்பிடி திருவிழா

image

சிவகாசி காளையார்குறிச்சி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் காளையார்குறிச்சி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் போட்டி போட்டு மீன்களை அள்ளி சென்றனர். இதில் கட்லா, கெண்டை, கெளுத்தி, விரால் உள்பட பல்வேறு வகையான மீன்கள் அதிக அளவில் பிடிப்பட்டது. தலைவர் கருப்பசாமி கூறுகையில், கடந்த 10ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எங்கள் ஊர் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது என்றார்.

News September 18, 2024

மூடப்பட்ட ஆலைகளால் கலக்கத்தில் தொழிலாளர்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1,100 பட்டாசு ஆலைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு 300 க்கும் மேற்பட்ட ஆலைகளில் விதிமீறல்கள் உள்ளதாக உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு ஆலைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் சுமார் 2000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தீபாவளி நேரத்தில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் நேரத்தில் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் வேலையிழந்து தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

News September 18, 2024

பைக் மீது கார் மோதி விபத்து

image

சிவகாசி அருகே மங்கலத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் இன்று காலை தனது பைக்கில் எரிச்சநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னாலிருந்து வந்த சொகுசு கார் பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமமூர்த்தி சிகிச்சை பெரும் நிலையில் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் ராம்குமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!