Virudunagar

News October 22, 2024

சொத்து வரியில் 5% தள்ளுபடி 

image

சிவகாசி மாநகராட்சியில் எதிர்வரும் 31.10.2024 தேதிக்குள் செலுத்தும் சொத்துவரி உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 48 வார்டுப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியை 2024 அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடியினை பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News October 22, 2024

அனுமதி இன்றி சீட்டு விளையாடிய 3 பேர் கைது

image

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செண்பகத்தோப்பு பேமலையான்கோவில் அருகே பொது இடத்தில் அனுமதியின்றி சீட்டு விளையாடிய ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன், காமராஜ் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 52 சீட்டுகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

News October 22, 2024

ஆட்சியர் தலைமையில் காப்பி வித் கலெக்டர் நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (அக்.21) வத்திராயிருப்பு ரங்காராவ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் 40 மாணவர்களுடனான காபி வித் கலெக்டர் என்ற 112வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு கல்லூரிகள் தேர்வு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.

News October 21, 2024

விருதுநகர் மாவட்ட மக்களே.. ரீல்ஸ், மீம்ஸ் போடுவீங்களா.?

image

தமிழ்நாடு அரசு சார்பாக “போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில் ரீல்ஸ், போஸ்டர் டிசைன், மீம்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியில் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை நவ.,15ஆம் தேதிக்குள் tndiprmediahub@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு அமைச்சர் கையால் சான்றிதழ் வழங்கப்படும்.

News October 21, 2024

இறையன்பு பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் நாளை (அக்.22) போதைக்கு எதிரான மாணவத் தூதுவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மேனாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். இதனை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.

News October 21, 2024

சுள்ளங்குடியில் புதிய ரேஷன் கடை அமைக்க  கோரிக்கை

image

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் சுள்ளங்குடி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அங்கு ரேஷன் கடை இல்லாததால் 3 கிமீ தொலைவிலுள்ள நல்லுக்குறிச்சி கிராமத்திற்கு கண்மாய் வழியாக முழங்கால் அளவு தண்ணீரில் சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சுள்ளங்குடி கிராமத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

News October 21, 2024

வெம்பக்கோட்டை அருகே 5 பெண்கள் கைது

image

வெம்பக்கோட்டை அருகே போலீசார் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது ராமலிங்காபுரம் பகுதியில் சவுடாம்பிகா ( 33), கோமதி (63), ராஜேஸ்வரி (53), விஜயா (65), மாலா (60), ஆகிய 5 பேர் அனுமதியின்றி வீடுகளில் கருந்திரி தயார் செய்து கொண்டிருந்தததெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 5 பெண்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 30 குரோஸ் கருந்திரி பறிமுதல் ஸ

News October 20, 2024

விருதுநகரிலிருந்து தேவர் குருபூஜைக்கு செல்வோர் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்டத்திலிருந்து தேவர் ஜெயந்திக்கு செல்வோர் முன் அனுமதி பெற்று குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. குருபூஜைக்கு சொந்த வாகனங்கள் மூலம் செல்வோர் வாகன எண், செல்வோர் விவரங்களை 23ஆம் தேதிக்குள் போலீஸுக்கு தெரிவித்து வாகன அனுமதி சீட்டு பெற வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். வாகன தணிக்கையின் போது வாகன உரிமையாளர் இருக்க வேண்டும்.

News October 19, 2024

குடும்பத்தோடு கூலித்தொழிலாளியை கொலை செய்த கொடூரம்

image

சிவகாசி அருகே நாரணாபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜசேகரன் (40). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வைர பிரகாசத்திற்கும் ஏற்பட்ட தகராறில் ராஜசேகரன் வைர பிரகாசத்தை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வைர பிரகாஷ் அவரது தந்தை விநாயக மூர்த்தி, சகோதரர் விக்ரமனை அழைத்து சென்று ராஜசேகரனை கத்தி, அரிவாளால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கொலை செய்த தந்தை மகன்கள்களை போலீசார் கைது செய்தனர்.

News October 19, 2024

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு இரண்டு தொழில் பிரிவுகளில் சேர பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை மூலம் கடந்த செப்டம்பர் 30 வரை சேர்ந்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது ஒரு சில தொழில் பிரிவுகளில் 100% பயிற்சியாளர்கள் சேர்க்கை பூர்த்தியடையாத காரணத்தால் மேலும் வரும் அக்.30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக விருதுநகர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!