India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேலக்கொண்டூரில் பட்டாபிராமர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோயில் வந்து பெருமாள் மற்றும் அம்மனை தரிசிப்பதின் வழியே வியாபாரத்தில் தொடர் நஷடம் இருந்தால், வியாபாரம் மேன்மை அடையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் பல வருட திருமண தடை நீங்கும் என்பதும் ஐதீகம். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

விழுப்புரம் வழியாக ஹசூர் சாகிப்- திருச்சி – ஹசூர் சாகிப் பிப்ரவரி மாத சிறப்பு ரயில். வண்டி எண்: 07615 / 07616. இது பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் & புதன் கிழமையில் இயங்கும். இது திருச்சி விழுப்புரம் திருக்கோவிலூர் திருப்பதி நெல்லூர் ஓங்கோல் தெனாலி குண்டூர் வழியாக சார்லபள்ளி, ஹசூர் சாகிப் செல்கிறது. மறு மார்கத்தில் இதே வழியில் வரும். இதற்கான முன்பதிவு இன்று (31.01.26) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.

விழுப்புரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த கப்பை கிராமத்தைச் சேர்ந்த அன்புசெல்வன் (24) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். சோதனையில் அவரிடம் போதை தரக்கூடிய 100 மாத்திரைகள், 2 சோடியம் குளோரைடு பாட்டில்கள் மற்றும் 5 ஊசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த திண்டிவனம் போலீசார், வாலிபரைக் கைது செய்தனர்.

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம் செய்யாததைக் கண்டித்து, விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அனுமதியின்றி சாலை மறியல் செய்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக, போராட்டத்தில் ஈடுபட்ட 30விவசாயிகள் மீது அரகண்டநல்லூர் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவெண்ணெய்நல்லூர் அருகே சரவணம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது. ஜூஸ் கடை உரிமையாளர் சக்கரபாணி வீட்டில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 3.5 பவுன் நகை மற்றும் பணத்தைத் திருடினர். அதேபோல், தனியார் பள்ளி ஆசிரியை அபர்ணா வீட்டில் 2.5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரே நாளில் நடந்த இந்தத் துணிகரத் திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாடிபள்ளம் பகுதியை சேர்ந்த ர.முருகன் (50). கூலித் தொழிலாளியான இவா், வீட்டுக்கு அருகிலுள்ள சிறிய பாலத்தின் மேல்பகுதியில் கடந்த 17-ஆம் தேதி இரவு படுத்திருந்தார். அப்போது திடீரென 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்தாா்.இதில் காயமடைந்த முருகனை மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வியாழக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் விசாரனை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜன.30) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய DSP சரவணன் தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். அவசர உதவிக்கு 100 அல்லது குறிப்பிட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஜன.30) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய DSP சரவணன் தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர். அவசர உதவிக்கு 100 அல்லது குறிப்பிட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.