Villupuram

News February 1, 2026

விழுப்புரம்: ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது!

image

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த சின்னகோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் அப்பு (எ) ஜவகர், ரவுடி. இவர் முன்விரோதம் காரணமாக கடந்த 28ம் தேதி, கோட்டக்குப்பம் அருகே 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.அதனைத் தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய புதுச்சேரி சாமிப்பிள்ளைத்தோட்டம் ஹேமத்குமார், அவரது சகோதரர் வசந்த், கிரி தமிழ்மணி கோகுல் உள்பட ஒரு சிறுவன் கைது

News February 1, 2026

விழுப்புரம்: தாய்மார்களுக்கு ரூ.11,000!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

News February 1, 2026

விழுப்புரம் அருகே அதிரடி கைது!

image

செஞ்சி ரோட்டில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன் பெயரில் போலீசார் நேற்று (ஜன.31) பிற்பகல், செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். இதில், அவர் 100 போதை மாத்திரைகள், 5 ஊசிகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், செஞ்சி அடுத்த கப்பை கிராமத்தை சேர்ந்த அன்புச்செல்வன்,என தெரியவர அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News February 1, 2026

விழுப்புரம் அருகே துணிகர திருட்டு!

image

தி.வெ.நல்லூர் அருகே டி. எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முகமது அலி இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். முகமது அலி மனைவி சைதாபீபீ தனது இரு மகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து 5 பவுன் நகை மற்றும் ரூ.11½ லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது. சம்பவ இடத்திற்கு வந்து திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தனர்.

News February 1, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.31) இரவு முதல் இன்று (பிப்.01) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 31, 2026

விழுப்புரம்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News January 31, 2026

விழுப்புரம்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

News January 31, 2026

விழுப்புரம்: தமிழ் தெரிந்தால் போதும், வங்கியில் வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க.

News January 31, 2026

கள்ளக்காதல் விவகாரம் – கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

image

பி.அரியலூர் கிராமத்தில் ராஜகுமாரன் கடந்த 2020 ஆம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ராஜகுமாரனின் மனைவி லதா மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் பிடித்து நீதிபதி ராஜசிம்மவர்மன் இன்று (ஜன.31) உத்தரவிட்டுள்ளார்.

News January 31, 2026

விழுப்புரம்: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

image

விழுப்புரம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..

error: Content is protected !!