India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது pmjay.<

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது pmjay.<

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

வள்ளலார் நினைவு நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விதிகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியைப் பேணவும், வள்ளலார் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டியை அடுத்த துறவி கிராமத்தைச் சேர்ந்த தையல் கலைஞர் வெற்றிவேல், நேற்று ராதாபுரம் வெட்டுக்காடு பகுதி திருமண மண்டபம் அருகே நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாகத் திடீரென மயங்கி விழுந்தார். விழுந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் வாட்ஸ் ஆப்பில் தெரியாத, தேவை இல்லாத நம்பர்களில் இருந்து கால் வருதா..?
1) உங்கள் வாட்ஸ்-ஆப் settings உள்ளே செல்லவும்.
2) அதில் Privacy பக்கத்தை தேர்வு பண்ணுங்க.
3) உள்ளே.., Silence Unknown Callers ஆப்ஷனை செலெக்ட் பண்ணுங்க.
4) இனி எந்த தேவை இல்லாத தெரியாத நபர்களிடமிருந்தும் உங்களுக்கு அழைப்பு வராது!
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. கண்டிப்பாக யாருக்காவது உதவியாக இருக்கும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து புறப்பட்டுச் சென்றது. மேம்பாலத்தில் சென்றபோது பிரேக் செயல்படாமல் பேருந்து வேகமாக முன்னேறியது. உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர், பேருந்தை சாலையோர தடுப்பில் மோதி நிற்கச் செய்தார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் உள்ள அனைத்து பயணிகளும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மரக்காணம் அருகே பிரம்மதேசத்தில் சாலையோரம் நடந்து சென்ற சரஸ்வதி (80) என்ற மூதாட்டி மீது அடையாளம் தெரியாத பைக் மோதிவிட்டுத் தப்பியது; இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு விபத்தில், திண்டிவனத்திலிருந்து வீடு திரும்பிய விக்னேஷ் (30) என்பவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து பனைமரத்தில் மோதியதில் அவர் உயிரிழந்தார். இந்த இரு விபத்துகள் குறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளையாட்டு திருவிழா போட்டிகள் விழுப்புரத்தில் விளையாட்டு திருவிழா முன்னிட்டு நாளை 31ம் தேதி ஆண்களுக்கான வாலிபால், கபடி, கிரிக்கெட் மற்றும் ஆண்கள், பெண்களுக்கு கயிறு இழுத்தல், கேரம் போட்டிகள் நடக்கிறது. 1ம் தேதி பெண்களுக்கு வாலிபால், கபடி, எறிபந்து மற்றும் ஆண்கள், பெண்களுக்கு தடகளம் மற்றும் மாவட்ட அளவில் ஆண்கள், பெண் களுக்கு ஓவியம், கோலப் போட்டிகள் தொடங்கும் என ஆட்சியர் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவெண்ணெய்நல்லூர் அருகே உறவினர் திருமணத்திற்காக வந்த லோகநாதன் என்பவர், மோட்டார் சைக்கிள் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் நிறுவன ஊழியரான இவருக்குத் திருமணம் முடிந்து 2 மாதங்களே ஆன நிலையில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.