Villupuram

News July 17, 2024

முன்னாள் அரசு ஊழியருக்கு ரூ.50 அபராதம்

image

பொய் தகவல்களை கூறி வழக்கு தொடர்ந்த தமிழக அரசு போக்குவத்து கழக முன்னாள் ஓட்டுனருக்கு ரூ.50 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 வாரங்களில் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு நேரில் சென்று அபராதம் செலுத்த சீனிவாசனுக்கு நீதிபதி ஆணையிட்டுள்ளார். சன்றிதழில் தவறாக குறிப்பிடப்பட்ட பிறந்தநாளை மாற்ற வலியுறுத்து விழுப்புரத்தைச் சேர்ந்த சீனிவாசன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலா: விண்ணப்பிக்க இன்று கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலாவிற்கு செல்ல விரும்புவோர், இன்று (ஜூலை 17) மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், தகவல்களுக்கு 1800 4253 1111

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

விழுப்புரத்தில் தேர்தல் விதிகள் ரத்து செய்யப்பட்டது

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 13ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை தற்போது தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று முதல் வழக்கமான அலுவலக பணியில் ஈடுபட்டனர்.

News July 16, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று (16-07-2024) இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 16, 2024

2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கடந்த 2019ஆம் ஆண்டு 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டத்தில் ஒரு சிறுமி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைதான பிரபா, அருண், துரைராஜ், ரவிக்குமார், மகேஷ் உட்பட 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.37,000 அபராதம் விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

News July 16, 2024

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற அமைச்சர்

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சியில் ஊரக பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை, இன்று (ஜூலை 16) அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைளை மனுக்களாக வழங்கினர். இதில், மாவட்ட ஆட்சியர், எம்.பி. தரணிவேந்தன், கூடுதல் ஆட்சியர், சார் ஆட்சியர், ஒன்றிய பெருந்தலைவர், வட்டாட்சியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர்.

News July 16, 2024

மக்கள் எங்களை கோட்டைக்கு அனுப்பாமல் விட்டனர்

image

பாமகவை கோட்டைக்கு அனுப்பாமல் மக்கள் தவறி விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதங்கமாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக மக்களுக்காக போராடி கொண்டிருக்கும் பாமகவின் பின்னால் மக்கள் முழுவதுமாக வர மறுத்து தயங்குகின்றனர். அது ஏனோ தெரியவில்லை, மக்களுக்காக எத்தனை போராட்டங்கள் செய்தாலும் தேர்தல் நேரத்தில் நாணயமான வித்தியாசமான பாமக மக்கள் கைவிடுகின்றனர்” என்றார்.

News July 16, 2024

அன்னியூர் சிவா பதவியேற்றார்

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவாவுக்கு, இன்று தலைமை செயலகத்தில் ,முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். பாமக வேட்பாளரவிட 67,000 வாக்குகள் அதிகம் பெற்று அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில், சட்ட்டப் பேரவையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை 134ஆவது தொடர்கிறது.

News July 16, 2024

விழுப்புரத்தில் காலை முதல் மழை

image

விழுப்புரம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முதலே வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில், நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக விட்டு விட்டு லேசாக தூறல் பெய்து வந்தது. இந்நிலையில், இன்று காலை பரவலாக மாவட்டம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியது. ஆனால், பள்ளிகளுக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!