Vellore

News December 20, 2024

வேலூர் சிறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்

image

வேலுார் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் (பொறுப்பு) பரசுராமன். இவர் கடலூர் மத்திய சிறைக்கு நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த ஆண்டாள் வேலூர் மத்திய சிறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 20, 2024

வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டத்தில் 10 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய திருமலை அதே அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் அங்கு பணிபுரிந்த கல்பனா மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளராகவும், இவர்கள் உள்பட 10 பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News December 20, 2024

சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுமிக்கு அஞ்சலி செலுத்திய எம்.ஏல்.ஏ

image

வேலூர் மாவட்டம்,கே.வி குப்பம் ஒன்றியம் துருவம் என்ற கிராமத்தில் சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த சிறுமிக்கு கே.வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை.M.ஜெகன்மூர்த்தி அவர்கள் உயிர் இழந்த சிறுமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் பலர்  உடன் இருந்தனர்.

News December 19, 2024

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டம்

image

கே.வி.குப்பம் துருவம் பகுதியில் நேற்று சிறுத்தை தாக்கி பெண் உயிரிழந்தார். அவரது சடலத்துடன் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று தங்களது பகுதிக்கு சாலை வசதி மற்றும் பேருந்து மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு வார்த்தையடுத்து சுமார் 1 1/2 மணி நேரத்துக்கு பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டு. உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.

News December 19, 2024

பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்த கலெக்டர்

image

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் வேலூர் மாநகராட்சி 3வது மண்டலத்திற்கு உட்பட்ட கன்னிகாபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (19.12.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News December 19, 2024

வேலூரில் நாளை வாகனங்கள் பொது ஏலம்

image

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் (scrap) உடைக்க தகுதியுள்ள நிலையில் உள்ளது. இவை நாளை (டிசம்பர் 20) வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

News December 18, 2024

பாகாயம் அருகே 89 கிலோ குட்கா பொருள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாகாயம் போலீசார் இன்று (டிசம்பர் 18) அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் 89 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக தண்டாயுதபாணி (45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 18, 2024

சிறுத்தை தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பா ?

image

வேலூர் கே.வி குப்பம் அருகே துருவம் என்ற கிராமத்தில் இன்று சிறுத்தை தாக்கி 23 வயது இளம் பெண் அஞ்சலி உரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அஞ்சலியை  உறவினர்கள் சடலமாக கண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கே.வி குப்பம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். 

News December 18, 2024

வேலூர் மாவட்டத்தில் நிரம்பிய ஏரிகள்

image

வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த கனமழையின் காரணமாக வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன.தற்போது 25 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி உபரி நீர் வெளியேறி கொட்டிக்கொண்டிருக்கிறது.6 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதமும்,9 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதமும்,25 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 36 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாக நீர் உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News December 18, 2024

வேலூர்: வீட்டில் நூலகம் வைத்திருப்பவர்களுக்கு பரிசு 

image

வேலூர் மாவட்டத்தில் வீட்டில் நூலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் நபருக்கு சொந்த நூலகங்களுக்கு விருது என்ற பெயரில் 3 ஆயிரம் மதிப்பில் கேடயம், சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்கள் வீட்டில் உள்ள நூலகத்தின் விவரங்களுடன், பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை dlovellore70@gmail.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!