Vellore

News November 9, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.

News November 9, 2024

ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து ஆட்சியர் ஆய்வு

image

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவம்பர் 9) கே.வி. குப்பம் வட்டம், லத்தேரி- திருமேனி இடையே ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கே.வி. குப்பம் ஒன்றிய குழுத்தலைவர் ரவிசந்திரன், வட்டாட்சியர் சந்தோஷ்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயா முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News November 9, 2024

சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் ஆட்சியர்

image

கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவ.9) லத்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News November 9, 2024

 தேர்வு மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகள் இன்று (நவம்பர் 9) நடந்தது. இதில் வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள அரசினர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 9, 2024

 ஆன்மீக பயணம் விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு

image

அறுபடை வீடு முருகன் கோயில்களுக்கு இலவச ஆன்மீக பயணமாக மூத்த குடிமக்களை அழைத்து செல்லும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நவ 15 ஆம் தேதி கடைசி நாளாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பங்களை வேலூர் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News November 9, 2024

வேலூர் ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் இன்று (நவம்பர் 9) பொது விநியோக திட்டத்தின் சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறுகிறது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் போன்றவை மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

ஒரே நாளில் 82 மதுபாட்டில்கள் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் இன்று (நவம்பர் 8) நடத்திய சோதனையில் 82 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

வீடு கட்ட கூட்டுறவு துறை மூலம் கடனுதவி

image

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகட்டுவதற்கு கூட்டுறவு துறையின் மூலம் வழங்கப்படும் கடனுதவிகளை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் வீடு வேண்டி விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகள், கரிகிரியில் உள்ள 50 வீடுகள் மற்றும் பேர்ணாம்பட்டு பத்தலபள்ளி 75 வீடுகள் உள்ளன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

News November 8, 2024

தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு விடைக்குறியீடு வெளியீடு

image

அரசு தேர்வுகள் துறையால் அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு கடந்த மாதம் 19ம் தேதி நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 17 மையங்களில் நடந்த தேர்வில் 4220 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான தற்காலிக விடைக்குறியீடு www.dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News November 8, 2024

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் நாளை ( நவ 9 ) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், ஆகியவை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவம்பர் 8) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!