India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேலூரில் ராணுவ பேட்டை என்று அழைக்கப்படும் கம்மவான் பேட்டையில் 57ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வாடிவாசலில் 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப் பாய்ந்து ஓடியது. குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைந்த கலைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியோடு கண்டு களித்தனர்.
சத்துவாச்சாரியைச் சேர்ந்த செல்வகுமார்(38), இன்று காலை 11 மணியளவில் சேண்பாக்கம், ராகவேந்திரா கோவில் பின்புறம் உள்ள சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது செல்வகுமாரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள், செல்வகுமாரை பைக்கில் இருந்து கீழே தள்ளி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குடியாத்தம் பிச்சனூர் தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி இவரது மகன் பிரதீப் வயது (20) கல்லூரி மாணவர். இவரும் இவரது நண்பரும் காட்பாடி ரோடு ஆசிரியர் காலனி அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலை விபத்தில் பிரதீப் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கோபி ரகுராம் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
வேலூர் கூட்டுறவு பண்டக சாலையில் 699 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் டோக்கனில் குறிப்பிட்ட நாள், நேரத்தில் வழங்கப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 4 லட்சத்து 6 ஆயிரத்து 500 பேர் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்கி உள்ளனர். 44,910 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறவில்லை. நாளை (சனிக்கிழமை) கடைசி நாளாகும் என்று கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் அப்துல்லா அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வருகிற ஜனவரி 25ஆம் தேதி நாளை (சனிக்கிழமை) தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 40க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கிறது. 10, 12, ITI, DIPLOMA, DEGREE ஆகிய கல்வித்தகுதி தேர்ச்சி பெற்ற வேலை தேடுபவர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜனவரி 23.01.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம்.
பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் வரும் (ஜனவரி 25) நடைபெறும் இடங்கள்: வேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சாத்துமதுரை, அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட அத்திக்குப்பம், காட்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட சேனூர், குடியாத்தம் தாலுகாவுக்கு உட்பட்ட எர்த்தாங்கல், கே.வி.குப்பம் தாலுகாவுக்கு உட்பட்ட வடுகந்தாங்கல், பேரணாம்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட மேல்பட்டி பெரிய தாமல் செருவு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
மங்களூருவில் இருந்து 1209 டன் யூரியா, 127 டன் பொட்டாசியம் ஆகியவை இன்று (ஜனவரி 23) காட்பாடிக்கு ரயிலில் வந்தது. இவற்றை தர கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் முருகன் முன்னிலையில் வேலூருக்கு 750 டன் யூரியா, ராணிப்பேட்டைக்கு 100 டன், திருப்பத்தூருக்கு 75 டன் யூரியா, காஞ்சிபுரத்திற்கு 100 டன் யூரியா, செங்கல்பட்டிற்கு 25 டன் யூரியா, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 200 டன் யூரியா பிரித்து அனுப்பப்பட்டது.
வேலூரில் அனுமதி இன்றி மெத்தனால் விற்பனை செய்யப்படுவதாக மத்திய நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வேலூர் மெயின்பஜார், காந்திரோடு, வேலப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள மருந்துக்கடைகளில் நேற்றிரவு திடீரென சோதனை செய்தனர். அப்போது அங்கு மெத்தனால் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டி.ஆர்.ஓ மாலதி தலைமையில் கடை, குடோன்களுக்கு ‘சீல்’ வைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் வருகிற ஜனவரி 25 நடைபெறவுள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், புதிய குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.