India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலூர் மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

வேலூர் மாவட்டத்தில் 65 காவலர்களை பணியிட மாற்றம் செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார். வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய சப் டிவிஷன்களில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 30 போலீசார் மற்றும் வேலூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி 35 காவலர்கள் என மொத்தம் 65 காவலர்களை வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

திருவலத்தில் அமைந்துள்ள தொன்மையான திருத்தலமான வில்வநாதீஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீலஸ்ரீ சித்தர் சிவானந்த மௌனகுரு யோகீஸ்வரர் சுவாமிகள் குருபூஜை நேற்று (ஜன.1) நடந்தது. இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் காட்பாடி ஒன்றிய திமுக செயலாளர் சரவண உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.8.49 கோடி மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 5.20 கோடி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.29 கோடிக்கு என மூன்று மாவட்டத்தில் 8.49 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வேலூர் பென்ட்லேண்ட் அரசு குழந்தைகள் மற்றும் மகப்பேறு பிரிவு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று இரவு வரை ஆங்கில புத்தாண்டு தினத்தன்று மருத்துவமனையில் 15 ஆண் குழந்தைகள், 10 பெண் குழந்தைகள் மொத்தம் 25 குழந்தைகள் பிறந்தன. தாயும், சேயும் நலமாக உள்ளனர். ஆங்கில புத்தாண்டு தினத்தன்று குழந்தைகள் பிறந்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <

வேலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள், முகவரி மாற்றம், திருத்தம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய நாளை (ஜன.3,4) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.